சௌந்தரபாண்டியை அவமானப்படுத்திய ஷண்முகம்.. முத்துப்பாண்டியின் முடிவு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Zee Tamil Anna Serial July 22nd 2023 Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 22, 2023, 11:05 AM IST
சௌந்தரபாண்டியை அவமானப்படுத்திய ஷண்முகம்.. முத்துப்பாண்டியின் முடிவு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்  title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பள்ளியில் முத்துப்பாண்டி ஆட்கள் பத்திரிகையை கொடுக்க ரத்னா அதிர்ச்சியடைந்து நிற்க போலீஸ் சௌந்தரபாண்டியை பகைச்சிட்டு உங்களால வாழ முடியாது, முத்துப்பாண்டி அன்னைக்கு வெங்கடேஷோட ட்ரெஸ்ஸை உருவிட்டு நிற்க வைத்தார், அப்போ உங்கள் நிலைமை என்று சொல்ல அவள் கண்ணீருடன் வீட்டுக்கு ஓடி வருகிறாள். 

மறுபக்கம் பரணி உட்பட எல்லாரும் பேசி கொண்டிருக்க வைகுண்டம் பரணியை புகழ்ந்து பேசுகிறார், இந்த நேரம் பார்த்து சில்லறை எடுத்துட்டு செல்ல ஷண்முகம் வேகவேகமாக வீட்டுக்கு வந்து திரும்பி செல்ல அப்போது ரத்னா கண்ணீருடன் வந்து நிற்கிறாள். 

ஸ்கூலில் நடந்த விஷயங்கள் அத்தனையும் சொல்ல ஆவேசப்படும் ஷண்முகம் அரிவாளுடன் கிளம்ப அவனை தடுத்து நிறுத்தும் பரணி அவன் கிட்ட போலீஸ் பதவி இருக்கு, உனக்கு நான்கு தங்கச்சிங்க இருக்காங்க.. அவங்களை நினைத்து பாரு, உன்னை விட்டா அவங்களுக்கு யாரு இருக்கா என்று சமாதானம் செய்கிறாள். 

அடுத்ததாக சண்முகமும் ரத்னாவும் ரோட்டில் சௌந்தரபாண்டியை சந்திப்பதற்காக நின்று கொண்டிருக்க காரில் வரும் அவர் என்னாலே என்கிட்டே மோதாமல் கார் கிட்ட மோதுற காருக்கு மாப்பிள்ளை, மாமான்னு எல்லாம் உறவுமுறை பார்க்க தெரியாது, இடிச்சிட்டு போயிட்டே இருக்கும் என்று பேசுகிறார், ரதனாவை பார்த்து இனிமே நான் உனக்கு மாமா இல்ல மாமனார், இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என்று சொல்ல அவள் எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்கிறாள். 

உடனே சௌந்தரபாண்டி எனக்கு பொட்டச்சி விருப்பம் எல்லாம் தேவை இல்ல என்று சொல்ல ஷண்முகம் எனக்கு தேவை என்று பதிலடி கொடுக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது, ஓடி போன ஓடுகாலி மகளை  பெண் எடுக்கறதே பெரிய விஷயம் என அவமானப்படுத்த ஷண்முகம் அதான் வேண்டாம், மொத்தமா விட்டுட்டு போங்கன்னு சொல்றேன் என்று பதிலடி கொடுக்கிறான். 

ஒரு கட்டத்தில் சௌந்தரபாண்டி சண்முகத்தை அறைய கை ஒங்க கையை பிடிக்கும் ஷண்முகம் உங்கள பார்த்து அடங்கி போறது பயத்துல இல்ல, உங்க மேல இருக்க மரியாதைல என டைலாக் பேச மக்கள் முன்னாடி ஷண்முகத்திடம் அவமானப்பட்ட சௌந்தரபாண்டி தலையை தொங்க போட்டபடி வீட்டுக்கு போகிறார். வீட்டுக்கு வந்த முத்துப்பாண்டி அவனை எதுக்கு சும்மா விட்டீங்க? இப்பவே என்ன பண்றேன் பாருங்க என துப்பாக்கியை எடுத்து கொண்டு கிளம்புகிறான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல்: முத்துப்பாண்டியின் முடிவு.. காணாமல் போகும் ரத்னா, சண்முகத்துக்கு ஷாக் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News