'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பம்?

சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Mar 20, 2022, 04:09 PM IST
  • வாடிவாசல் படப்பிடிப்பு முன்னோட்டம் ஆரம்பம்.
  • சூர்யா வெற்றிமாறன் நேரில் ஆய்வு.
  • விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்.
'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பம்? title=

சமீப காலங்களாக சூர்யா நடிக்கும் படங்கள் சமூக அவலங்களை துணிச்சலாக வெளியுலகிற்கு எடுத்துரைத்து, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மார்ச் 10ம் தேதி சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது.   இதனை தொடர்ட்ந்து நடிகர் சூர்யா தற்போது ' வாடிவாசல் ' படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். 

suriya

மேலும் படிக்க | விக்ரமிற்கு நடிக்கவே தெரியாது - பிரபல இயக்குனர் ஓபன் டால்க்!

இந்த படமானது சி.எஸ்.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' என்கிற தமிழ் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  அவர் எழுதிய புத்தகத்தின் கதையானது ஜல்லிக்கட்டுக் காளை அல்லது சண்டையிடும் காளைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை அடிப்படையாக கொண்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகப்போகும் இப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் சென்னையில் உள்ள ஈசிஆரில் நடைபெற்று வருகிறது.  அந்த டெஸ்ட் ஷூட்டிங்கில் வெற்றிமாறனும், சூர்யாவும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளனர்.  இதனை அங்கு கூடியிருந்த சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களில் யாரோ இந்த நிகழ்வை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துவிட்டனர், தற்போது சூர்யா மற்றும் வெற்றிமாறன் படப்பிடிப்பு தளத்தை சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

suriya

'வாடிவாசல்'  படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூலை தொடங்கப்படும் என்று படக்குழு கூறியிருந்த நிலையில், படப்பிடிப்பிற்கு ஏற்ற சிறப்பான இடத்தை சென்னையின் புறநகரில் படக்குழுவினர் சோதனை செய்து இருக்கின்றனர்.  மேலும் இப்படத்தில் சூர்யாவின் தோற்றம் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் இன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே இவர் ஒரு வீடியோவில் 'வாடிவாசல்' படத்தின் இசை மற்றும் பேக்ரவுண்டானது மண்வாசம் வீசும் வகையிலும், பசுமையாகவும் இருக்கும் என்று கூறியிருந்தார்.  சூர்யா பாலா படத்தில் நடித்து முடித்த பிறகு 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை, விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | உங்க மாமனார் தான் காரணம்: தனுஷிடம் இளையராஜா கூறிய விஷயம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News