11வது திருமண நாளில் அடியெடுத்து வைக்கும் சூர்யா-ஜோதிகா

Last Updated : Sep 11, 2017, 04:35 PM IST
11வது திருமண நாளில் அடியெடுத்து வைக்கும் சூர்யா-ஜோதிகா title=

நடிகர் சூர்யா - ஜோதிகா நட்சத்திர தம்பதியினர் வெற்றிகரமாக இன்று தங்களது 11 வது திருமண நாளில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர்.

கடந்த 2006 ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் நடிகை ஜோதிகாவை கரம்பிடித்தார் சூர்யா. தற்போது இந்த தம்பதியினருக்கு தியா மற்றும் தேவ் என 2 குழந்தைகள் உள்ளனர். 

இன்று திருமண நாளைக் கொண்டாடும் சூர்யா - ஜோதிகா தம்பதியினருக்கு காலையில் இருந்தே வாழ்த்துக்கள் குவிந்து கொண்டுள்ளன.

குழந்தைகள் பள்ளிக்குப் போக ஆரம்பித்த பிறகு நடிகை ஜோதிகா 2-வது முறையாக சினிமாவிற்கு அடி எடுத்து வைத்தார். ’36 வயதினிலே’ மூலம் தொடங்கிய வெற்றிப் பயணம், ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, மணிரத்னம் படம் எனத் தொடர்கிறது.
 
சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ரிலீஸுக்குத் தயாராகிவரும் நிலையில், அடுத்து செல்வராகவன் மற்றும் சுதா கொங்கரா இருவரின் படங்களிலும் சூர்யா நடிப்பார் என்ற பேச்சு அடிபடுகிறது. 

Trending News