‘வாடிவாசல்’ படத்திற்காக லண்டன் சென்ற வெற்றிமாறன்..! படப்பிடிப்பு தொடங்குவது எப்போது..?

பிரபல இயக்குநர் வெற்றிமாறன், தான் இயக்கவுள்ள வாடிவாசல் படத்தின் வேலைக்காக லண்டனிற்கு சென்றுள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : Jul 3, 2023, 07:15 AM IST
  • சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படம், வாடிவாசல்.
  • இதற்கான முதற்கட்ட பணிகள் நடைப்பெற்ற வருகின்றன.
  • வாடிவாசல் பட பணிகளுக்காக வெற்றிமாறன் லண்டன் சென்றுள்ளார்.
‘வாடிவாசல்’ படத்திற்காக லண்டன் சென்ற வெற்றிமாறன்..! படப்பிடிப்பு தொடங்குவது எப்போது..?  title=

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் படம், வாடிவாசல். தற்போது அப்படத்திற்கான முதற்கட்ட வேலைகள் நடைப்பெற்று வருகின்றன. இதுகுறித்த ஒரு அப்டேட்டை இயக்குநர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
‘வாடிவாசல்’ திரைப்படம்..

தமிழர் வீரத்தின் அடையாளமாக கருதப்படும் விளையாட்டுகளுள் ஒன்று, ஜல்லிக்கட்டு. இந்த விளையாட்டை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படம்தான் வாடிவாசல். இதில், நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். 1940ஆம் ஆண்டில் சி.எஸ் செல்லபா என்பவர் எழுதிய ‘வாடிவாசல்’ எனும் கதைப்புத்தகத்தை வைத்து எடுக்கப்பட உள்ள படம்தான் இது. இந்த படம் குறித்த அறிவிப்பு சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியானது. ஆனால், வெற்றிமாறன் மற்றும் சூர்யா இருவருமே வெவ்வேறு படங்களில் பிசியாக இருந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. 

மேலும் படிக்க | தனுஷ் உள்பட பல திரை பிரபலங்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்..!

பட அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்..

வெற்றிமாறனின் எல்லா படங்களுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பது பாேல ‘வாடிவாசல்’ குறித்த அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் தவமாய் தவம் இருக்கின்றனர். சமீபத்தில் வெற்றிமாறன் ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர், தான் இயக்கி வரும் படங்கள் குறித்து பல அப்டேட்டுகளை வெளியிட்டார். அதில் வாடிவாசல் அப்டேட்டும் ஒன்று. வாடிவாசல் படத்தின் முதற்கட்ட பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் இதற்காக ஒரு தனி குழு பணிபுரிந்து வருவதாகவும் கூறினார். 

லண்டன் சென்ற வெற்றிமாறன்..

வெற்றிமாறன், முன்னர் வாடிவாசல் படம் குறித்து பேசியிருந்த பாேது இப்படத்திற்காக ரோபோ காளை உருவாக்கப்பட்டு வருவதாக கூறியிருந்தார். இதற்கான பணிகள் பிரத்யேகமாக லண்டனில் நடைப்பெற்று வருவதாக அவர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் வெற்றிமாறன் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இந்த ட்வீட்டில் , “‘வாடிவாசல்’ படத்திற்காக லண்டன் பயணம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

வீட்டில் மாடு வளர்க்கும் சூர்யா..

வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா தன் வீட்டிலும் ஒரு மாட்டை வளர்த்து வருவதாக வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். இந்த மாட்டினை ஸ்கேன் செய்து, இதே போன்ற ரோபோ காளையைத்தான் வாடிவாசல் படத்தில் உபயோகிக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

விடுதலை 2 படத்திற்கு பிறகு…

சில காரணங்களால், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கப்படாமலேயே இருக்கின்றன. தற்போது வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். இந்த படம் முடிந்த பிறகு அவர் வாடிவாசல் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவும் தற்போது சிறுத்தை சிவா இயக்கிவரும் ‘கங்குவா’ படத்தில் பிசியாக உள்ளார். 

வேறு இயக்குநருடன் கைக்கோர்த்த சூர்யா? 

வெற்றிமாறன்-சூர்யா கூட்டணிக்காக பலர் காத்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், பலருக்கி அதிர்ச்சி அளிக்கும் வகையிலான ஒரு அப்டேட் வெளியானது. வெற்றிமாறன், ‘வாடிவாசல்’ பட பணிகளை இழுத்தடிப்பதால் சூர்யா அடுத்து இன்னொரு இயக்குநருடன் கைக்கோர்த்து விட்டதாக பேச்சு அடிப்பட்டது. ‘சூரரைப்போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கராதான் அந்த இயக்குநர் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாததால் அந்த பேச்சு அப்படியே நின்று போனது. 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனை ரஜினியுடன் ஒப்பிட்ட மிஷ்கின்..! எந்த விஷயத்தில் தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News