43 வயதில் கர்ப்பமான விஜய் பட நடிகை!

Bipasha Basu Pregnant: பாலிவுட் நடிகையும் தமிழில் சச்சின் பட நாயகி மான பிபாஷா பாசு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 17, 2022, 10:02 AM IST
  • விஜய் பட நடிகை கர்ப்பம்
  • வைரலாகும் புகைப்படங்கள்
43 வயதில் கர்ப்பமான விஜய் பட நடிகை! title=

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் முதல் கதாநாயகிகள் வரை எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேறுப்பு பெற்று வருகின்றனர். அந்த வகையில் விஜயுடன் சச்சின் படத்தில் நடித்து மக்கள் மனதை கொள்ளவ கொண்டவர் தான் நடிகர் பிபாஷா பாசு. இவர் கடந்த 2001 இலிருந்து நடித்து வருகிறார். மேலும் இவர் இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு சச்சின் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் தான் பிபாஷா பாசு தமிழ் சினிமா உலகில் நுழைந்து மக்கள் மத்தியில் பிரபலமானார். 

இந்த படத்தில் விஜய், அவருக்கு ஜோடியாக ஜெனிலியா, வடிவேலு, உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும் இந்த படத்தை ஜான் மகேந்திரன் இயக்கினார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிபாஷா பாசு வேறு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. மேலும் இவர் அதிகம் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தியிருந்தார். அதன்படி இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தார். இதனிடையே நடிகை பிபாஷா பாசு நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்து இருந்ததாக செய்திகள் வெளியாகி வைரலானது. ஆனால், அது உண்மை இல்லை என்று தெரியவந்தது. 

மேலும் படிக்க | விக்ரமிற்கு பிறகு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் ஒரே படம்! அதிகாரப்பூர்வ தகவல்!

அந்தவகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான அலோன் படத்தில் நடித்த போது தன்னுடன் நடித்த கரண் சிங் குரோவரை நடிகை பிபாஷா பாசு காதலித்தார்.  இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர், பின்னர் 2016 ஆம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் கரண், பிபாஷா பாசு இணைந்து டேஞ்சர்ஸ் என்ற வெப்சீரிஸில் நடித்து இருந்தனர். 

இந்த நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிபாஷா பாசு, சமீபகாலமாக தான் அடிக்கடி எடுத்துக் கொண்ட புகைப்படம், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது இவர் தான் கர்ப்பமாக இருப்பதை தனது இனஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய ஒரு புகைப்படம் வெளியிட்டு பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தில் அவர் தன் கணவருடன் போஸ் கொடுத்துள்ளார். அத்துடன் அதில் அவர், ஒரு புதிய நேரம், ஒரு புதிய கட்டம், ஒரு புதிய ஒளி நமது வாழ்க்கையின் ப்ரிஸத்திற்கு மற்றொரு தனித்துவமான நிழலை சேர்க்கிறது. நாம் முன்பு இருந்ததை விட நம்மை இன்னும் கொஞ்சம் முழுமையாக்குகிறது.

நாங்கள் இந்த வாழ்க்கையைத் தனித்தனியாகத் தொடங்கினோம், பின்னர் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம், அதிலிருந்து நாங்கள் இருவரும் இணைந்தோம். இருவர் மீது மட்டும் அதிக அன்பு பார்ப்பதற்கு கொஞ்சம் அநியாயமாக தோன்றியது. ஒரு காலத்தில் இருவராக இருந்த நாங்கள் இப்போது மூன்று பேர் ஆகிவிடுவோம். நமது அன்பால் இந்த பூமிக்கு வெளிப்படும் ஒரு படைப்பு நம் குழந்தை விரைவில் நம்முடன் சேர்ந்து நமக்கு மகிழ்ச்சியை சேர்க்கும். 

 

 

உங்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் நிபந்தனையற்ற அன்புக்கு, உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் நல்வாழ்த்துக்கள், அவை எப்போதும் எங்களில் ஒரு பகுதியாக இருக்கும். எங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், மற்றொரு அழகான வாழ்க்கையை எங்களுடன் வெளிப்படுத்தியதற்கும் நன்றி, எங்கள் குழந்தை என்று பதிவிட்டிருக்கிறார். பிபாஷா பாசுவின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அவரது இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஓசிலதானே படம் பார்க்குறீங்க?... பேரரசு கேள்வியால் அதிர்ந்துபோன பத்திரிகையாளர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News