எவன் கூடயோ ஊர சுத்திகிட்டு இருக்க? கேள்வி கேட்கும் முத்துப்பாண்டிக்கு ஷாக் கொடுக்கும் சண்முகம்

Anna Serial Today's Episode Update: பாக்கியத்தின் முடிவால் பங்கப்படும் சௌந்தரபாண்டி.‌. பரணி கொடுத்த அதிர்ச்சி - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 25, 2023, 02:32 PM IST
  • பாக்கியத்தின் முடிவால் பங்கப்படும் சௌந்தரபாண்டி.
  • பரணி கொடுத்த அதிர்ச்சி
  • அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்
எவன் கூடயோ ஊர சுத்திகிட்டு இருக்க? கேள்வி கேட்கும் முத்துப்பாண்டிக்கு ஷாக் கொடுக்கும் சண்முகம் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் பிரபலமான சீரியல் அண்ணா.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்துடன் வீட்டுக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

 பரணி சண்முகத்துடன் வீட்டுக்கு வந்து இறங்க இதை பார்த்த முத்துப்பாண்டி உனக்கு இன்னும் கொஞ்ச நாள்ல இன்னொருத்தன் கூட கல்யாணம் நடக்க போகுது, அப்படி இருக்கும்போது எவன் கூடயோ ஊர சுத்திகிட்டு இருக்க என அடிக்கப் பாய சண்முகம் முத்துப்பாண்டியை தடுத்து நிறுத்தி ஷாக் கொடுக்கிறான். 

பிறகு சௌந்தரபாண்டி அமைதியாக இரு, எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் என்று சமாதானம் செய்கிறார். அதைத் தொடர்ந்து இங்கே சௌந்தரபாண்டி குடிக்க காபி கொடுக்க கூட ஆள் இல்லாமல் அவதிப்படுகிறார். 

அந்த நேரம் பார்த்து சனியன் காபி வாங்கி வர வாடா வாடா இந்த காபிக்காகத்தான் இவ்வளவு நேரமா காத்துகிட்டு இருந்தேன் என்று சொல்லி சௌந்தரபாண்டி அதை வாங்கி குடித்து வாந்தி எடுக்கிறார். என்னலே காபி வாங்கிட்டு வர சொன்னா கசாயத்தை வாங்கிட்டு வந்து இருக்க என்று கேட்க சனியன் ஊர்லயே நல்ல காபி கடை இது ஒன்னு தான் இருக்கு, இதையும் விட்டா காபி கிடைக்காது என்று சொல்ல எனக்கு இந்த காபி எல்லாம் தேவையில்லை என சௌந்தரபாண்டி குடிக்க மறுக்கிறார். 

பரணி இப்ப தெரியுதா எங்க அம்மாவோட அருமை என்று நக்கல் அடிக்கிறாள். இன்னொரு பக்கம் பாக்கியம் தடபுடலாக எல்லாவற்றையும் சாப்பிட்டு ஓய்வெடுக்க சண்முகத்தின் தங்கைகள் எல்லோரும் பாக்கியத்தின் கால் மீது தலை வைத்து படுத்து பேசிக் கொண்டிருக்கின்றனர். 

பாக்கியம் தன்னுடைய அம்மா பற்றி பேசுகிறாள். மேலும் அண்ணி இருக்கும் வரை இந்த குடும்பம் ரொம்ப நல்லா இருந்துச்சு என்று சொல்ல சண்முகத்துக்கு ஜெயிலில் இருக்கும் அம்மாவின் ஞாபகங்கள் வருகிறது. மேலும் இந்த இசக்கி என் வீட்டு மருமகளா வந்ததும் அவதான் அவ மாமா சௌந்தரபாண்டியையும் முத்துப்பாண்டியையும் திருத்தணும் என சொல்ல இசக்கி நான் உங்க வீட்டு மருமகளாக வந்ததும் அவங்களுக்கு கச்சேரி இருக்கு என்று சொல்கிறாள். 

மேலும் படிக்க | ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம்

அடுத்ததாக சௌந்தரபாண்டி ஹோட்டலில் இருந்து சாப்பாடு வர வைத்து சாப்பிட அதுவும் நன்றாக இல்லை என்று புலம்ப திரும்பவும் பரணி அம்மாவின் அருமையை எடுத்து சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறாள். பாக்கியம் பரணிக்கு போன் செய்து சௌந்தரபாண்டி குறித்து விசாரிக்க அந்த ஆள் தான் உன்னை வீட்டை விட்டு அனுப்பிட்டார் இல்ல நீ ஏன் அவரைப்பற்றி விசாரிச்சுட்டு இருக்க என்று திட்டி போனை வைக்கிறாள். 

அடுத்து தூங்கிக் கொண்டிருக்கும் சௌந்தரபாண்டி திடீரென எழுந்து தண்ணீர் குடிக்க செம்பை எடுக்க வெறும் செம்பு மட்டுமே இருக்க கிச்சனுக்கு சென்று குடத்தில் இருந்து தண்ணீரை ஊற்றும் போது அது கீழே கொட்டி வழுக்கி கீழே விழுகிறார். முத்துப்பாண்டி தூக்க முயற்சி செய்ய திரும்பவும் வழுக்கி கீழே விழுகிறார் சௌந்தரபாண்டி. 

அம்மா இல்லாம உங்களுக்கு ஒண்ணுமே கிடைக்காது என்று பரணி சொல்ல சனியனும் ஆமா ஐயா அம்மாவை எப்படியாவது கூட்டிட்டு வந்துடுங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி முத்துப்பாண்டியிடம் உங்க அம்மாவை கூட்டிட்டு வந்துடுடா என்று சொல்ல அவன் நான் போக மாட்டேன் என்று மறுக்க உன் அப்பனுக்காக இதை கூட பண்ண மாட்டியா என்று சொல்லி முத்துப்பாண்டியை சம்மதிக்க வைக்கிறார். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | 'ரொம்ப கஷ்டமா இருக்கு.. தப்பா போடாதீங்க’ கணவர் இறப்புக்கு நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரியாக்ஷன்​

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News