பரணி முன்னால் அசிங்கப்பட்ட ஷண்முகம், நடந்தது என்ன? அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அண்ணா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2023, 10:48 AM IST
  • சௌந்தரபாண்டி மனதில் வன்மத்தை வைத்துக் கொண்டு வெளியில் ரொம்ப சந்தோஷம் என நடிக்கிறார்.
  • பாக்கியம் ரத்னாவுக்கு இந்த பூவை கொடுத்துடு என சந்தோஷத்தோடு கொடுத்து அனுப்பினார்.
  • புரோக்கர் சைகையில் சொல்வதை சண்முகத்தின் தங்கைகள் ட்ரான்ஸ்லேட் செய்து பேசுகின்றனர்.
பரணி முன்னால் அசிங்கப்பட்ட ஷண்முகம், நடந்தது என்ன? அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அண்ணா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். கல்யாண புரோக்கர் வந்து சண்முகத்திடம் ரத்னாவை பார்த்துட்டு போன மாப்பிள்ளை வீட்டார் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க என சொல்ல சண்முகம் சந்தோஷப்படுகிறார். ஸ்வீட்டை எடுத்து புரோக்கருக்கு ஊட்ட போக வேணாம்யா அதுக்கு வேற நீ தனியா காசு கேப்ப என சொல்ல அவர் வாயில் ஸ்வீட்டை திணிக்கிறார். 

பிறகு புரோக்கர் வாய் திறந்து எதுவும் பேசாத நிலையில் அவர் சைகையில் சொல்வதை சண்முகத்தின் தங்கைகள் ட்ரான்ஸ்லேட் செய்து பேசுகின்றனர். அந்த சமயம் பார்த்து செல்லக்கனி இது கூட வாடா உனக்கு புரியல முட்டாப் பயலேனு சொல்றாரு என்று போட்டுவிட புரோக்கர் நான் அப்படியெல்லாம் சொல்லல அதெல்லாம் உன் தங்கச்சிங்களே சொல்றது என அலறுகிறார். அதன் பிறகு இந்த விஷயத்தை முதல்ல மாமா கிட்ட சொல்லிடலாம் என சொல்லி சண்முகம் புரோக்கரை அழைத்துக் கொண்டு சௌந்தரபாண்டி வீட்டுக்கு வர அங்கு மொட்டை மாடியில் பரணி நின்று கொண்டிருப்பதை காதல் பார்வையோடு பார்க்கிறார். 

பிறகு சௌந்தரபாண்டியிடம் தங்கச்சிக்கு வரன் அமைந்திருக்கு என சொல்ல அவர் மனதில் வன்மத்தை வைத்துக் கொண்டு வெளியில் ரொம்ப சந்தோஷம் என நடிக்கிறார். பிறகு பாக்கியம் ரத்னாவுக்கு இந்த பூவை கொடுத்துடு என சந்தோஷத்தோடு கொடுத்து அனுப்பின கையோடு சௌந்தரபாண்டி இவன் குடும்பமே மானங்கெட்ட குடும்பம், அப்படி இருக்கும் போது இந்த குடும்பத்தில் பொண்ணு எடுக்கறவன் எப்படி பட்ட குடும்பமா இருப்பான் என மோசமாக பேசுகிறார். 

பிறகு சண்முகம் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு கிளம்பும்போது இசக்கி போன் செய்து அப்பா இன்னும் வரல, கடுகு டப்பாவில் வைத்திருந்த 100 ரூபாயையும் காணோம் என சொல்ல சரி நான் அப்பாவ கூட்டிட்டு வரேன் என ரோடு ரோடா தேடி அலைகிறார். அப்போது அந்த பக்கம் வரும் உறவினர் ஒருவரிடம் மதினி அப்பாவை பார்த்தீர்களா என கேட்க அவர் இப்பதான் 100 ரூபாய் வாங்கிட்டு போனாருனு சொல்ல சண்முகம் அந்தப் பெண்மணியிடம் 200 ரூபாயை கொடுத்துவிட்டு அடுத்த முறை அப்பா கேட்டாலும் இல்லன்னு சொல்லாம கொடுங்க என சொல்கிறார். 

பிறகு சண்முகம் ரோட்டோரத்தில் விழுந்து கிடக்கும் தனது அப்பாவை வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஒயின் ஷாப் கடைக்காரர் இப்படியா குடிப்பாங்க என திட்ட சண்முகம் அவர் காசில அவர் குடிக்கிறார் உனக்கு என்ன என தன்னுடைய அப்பாவை விட்டுக் கொடுக்காமல் பேசி சண்டை போடுகிறார். 

மேலும் படிக்க | ஷண்முகத்துக்கு மலர்ந்த காதல்.. காரில் வந்து மோதிய பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

பிறகு அப்பாவை பத்திரமாக வீட்டுக்கு கொண்டு வந்து அவரை குளிப்பாட்ட அவர் தன்னுடைய இயலாமையை பற்றி பேசி வருந்துகிறார். பிறகு சண்முகம் தன்னுடைய அம்மாவின் நினைவாக இருக்கும் ஒரு வேப்ப மரத்தின் அருகே சென்று நீ எங்கள பத்தி கொஞ்சம் கூட யோசிக்காமல் ஓடிப் போயிட்ட, உன்னால எங்களுக்கு எவ்வளவு கெட்ட பேரு ஒரு நாள் கண்டிப்பா உன்ன பாக்கணும், என் தங்கச்சிகளை நல்ல இடத்துல கட்டி கொடுத்து இருக்கேனு உன் கிட்ட சொல்லணும் என கோபப்பட்டு பேசுகிறான். 

அதனைத் தொடர்ந்து மறுநாள் காலையில் சண்முகம் செடிக்கு தண்ணி ஊத்துறேன், மோட்டார் போட்டு கரண்ட் செலவு பண்ணாமல் சிக்கனப்படுத்துறேன் என சொல்லி ஓடி ஓடி தன்மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளித்த படியே செடிக்கு தண்ணீர் ஊற்றுகிறார். 

இந்த சமயம் பார்த்து பரணி, பாக்கியம் மற்றும் சிவபாலன் ஆகியோர் வீட்டுக்கு வந்து சீம் பாலை கொடுத்துவிட்டு பேசிக் கொண்டிருக்க அப்போது சண்முகம் வெளியே வெறும் டவலை மட்டுமே கட்டிக் கொண்டு குளித்துக் கொண்டிருக்க போன் பேச வெளியே வரும் பரணி சண்முகத்தை பார்த்து சிரிக்க அவர் அசிங்கப்பட்டு நிற்கிறார். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சொந்த ஊருக்கு வர மறுக்கும் பரணி... ஷண்முகத்தால் புலம்பும் தங்கைகள் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

மேலும் படிக்க |  தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News