வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு அதிர்ச்சி: விமான கட்டணத்தில் 2 மடங்கு ஏற்றம்

தமிழகத்திலிருந்து, பணி நிமித்தமாகவும், சுற்றுலாவாகவும் பலர் அமீரகம், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு விமானங்களில் அவ்வப்போது பயணிக்கிறார்கள். விமான டிக்கெட்டுகளில் ஏற்படவுள்ள ஏற்றம் இவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 25, 2022, 02:13 PM IST
  • சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய பகுதிகளிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு நேரடியாக விமான சேவைகள் இருக்கின்றன.
  • தமிழகத்திலிருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் விமான கட்டணங்கள் இரு மடங்காக உயர உள்ளன.
  • விலை அதிகரிப்பு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் வினாம நிறுவனங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு அதிர்ச்சி: விமான கட்டணத்தில் 2 மடங்கு ஏற்றம் title=

தமிழகத்திலிருந்து அடிக்கடி அமீரகம் செல்லும் நபரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி உள்ளது. தமிழகத்திலிருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் விமான கட்டணங்கள் இரு மடங்காக உயர உள்ளன.

தமிழகத்திலிருந்து, பணி நிமித்தமாகவும், சுற்றுலாவாகவும் பலர் அமீரகம், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு விமானங்களில் அவ்வப்போது பயணிக்கிறார்கள். விமான டிக்கெட்டுகளில் ஏற்படவுள்ள ஏற்றம் இவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய பகுதிகளிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு நேரடியாக விமான சேவைகள் இருக்கின்றன. இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், தற்போது திடீரென தமிழகம் உட்பட தென் இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் விமான கட்டணங்கள் இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | அமீரகத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல செய்தி: நிறுவனங்கள் ஊதியத்தை உயர்த்தக்கூடும்

சென்னை-அபுதாபி, திருவனந்தபுரம்-துபாய், கொச்சி-துபாய் ஆகிய வழித்தடங்களின் விமான டிக்கெட்டுகள் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பயண டிக்கெட் விலை அதிகரிப்பு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் வினாம நிறுவனங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போதுதான் பள்ளி அமர்வு விடுமுறைக்கு பிறகு தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் பலர் இந்தியாவுக்கு வருகின்றனர். பயணிகளின் போக்குவரத்து அதிகமாக இருக்கும் காலமாக இது இருப்பதால், தற்போது கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

மேலும், சென்னையிலிருந்து துபாய்க்கு ஒரு நாளில் இயக்கப்படும் விமாங்களின் எண்ணிக்கையும் சமீப காலங்களில் குறைந்துள்ளது. இதுவும் கட்டண உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. 

மேலும் படிக்க | UAE: தொழிலாளர் ஊதிய பிரச்சனைகளை தீர்க்க மனித வள மேம்பாட்டு அமைச்சக தலைமையில் குழு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News