வேகமாக கார் ஓட்டியதால் அதிர்ச்சியடைந்த 69-வயது தாத்தா பலி!

மகாராஸ்டிர மாநிலம் நாசிக்கில் அதிவேகமாக கார் ஓட்டியதால் 69-வயது முதியவர் அதிரிச்சியில் பலியாகியுள்ளார்!

Last Updated : Apr 13, 2018, 06:54 PM IST
வேகமாக கார் ஓட்டியதால் அதிர்ச்சியடைந்த 69-வயது தாத்தா பலி! title=

நாசிக்: மகாராஸ்டிர மாநிலம் நாசிக்கில் அதிவேகமாக கார் ஓட்டியதால் 69-வயது முதியவர் அதிரிச்சியில் பலியாகியுள்ளார்!

இச்சம்பவத்தில் பலியான புர்ராராம் ஆராக் என்பவர் தனது குடும்பத்தினருடன், நாசிக்கிற்கு புனிதயாத்திரை மேற்கொண்டுள்ளார். பயணத்தின் போது வழியில் இளைப்பாற கோதாவரி நதிக்கு அருகில் உள்ள மஸோப் மைதானத்தில் ஓய்வு எடுத்துள்ளனர்.

அப்போது அவ்வழியாக கார் ஒன்று அதி வேகமாக சென்றுள்ளது. இந்த காரின் அதிர்வானது இந்த 69-வயது முதியவரின் உயிரை பரித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அவரது மகன் ராம்பாபு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

சம்பந்தப்பட்ட காரின் விவரங்களையும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பஞ்சவாட்டி காவல்நிலைய அதிகாரி தெரிவிக்கையில்... சம்பந்தப்பட்ட கார் உத்திரப்பிரதேச மாநிலம் பாந்தா மாநிலம் முரோய்லி கிராமத்தை சேர்ந்த வாகனம் என தெரியவந்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்!

Trending News