மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான தீபாவளி: அகவிலைப்படியில் 3% ஏற்றம்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தியை நேற்று அரசு அவர்களுக்கு வழங்கியது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு பம்பர் பண்டிகை பரிசாக, மத்திய அமைச்சரவை 3 சதவீத அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரண (டிஆர்) உயர்வுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த முடிவால் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள். 

1 /4

அடிப்படை சம்பளம் /ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 28 சதவீத  அகவிலைப்படியுடன், தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள 3 சதவிகித அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணமும் (டிஆர்) சேரும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ .9,488.70 கோடி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

2 /4

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலை நிவாரணத்தை 11% அத்கரித்தது. இதன் மூலம் 17% ஆக இருந்த அகவிலைப்படி 28% ஆக அதிகரித்தது. இது 01.07.2021 முதல் அமலுக்கு வந்தது.

3 /4

கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட முன்னோடியில்லாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021-ல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை அரசு முடக்கியது.

4 /4

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலை நிவாரணத்தை 01.07.2021 முதல் 28% ஆக அதிகரிக்க அரசு முடிவு செய்தது. இந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த அரசு ஊழியர்களுக்கு தற்போது மத்திய அரசு மீண்டும் ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3% அகவிலைப்படி அதிகரிப்புக்கு தற்போது அரசு ஒப்புதல் அளித்து விட்டது.