சனி அருள் பார்வையால் இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பதவி: மொத்தத்தில் ராஜவாழ்க்கை!!

Shani Dashami Drishti Effect: நீதியின் கடவுளான சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கிறார். சனி பகவானின் பார்வை தங்கள் மீது பட்டாலே அனைத்து ராசிக்காரர்களும் அச்சப்படுவதுண்டு. 

சனியின் சுப மற்றும் அசுபமான பார்வை மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சனியின் அப்படிப்பட்ட ஒரு பார்வையான தசமி திருஷ்டி பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /6

சனி பகவானின் கருணை பார்வை ஒருவர் மீது பட்டால், அந்த நபர் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் அடைகிறார். அவர் வாழ்க்கையில் அதிக முன்னேற்றம் பெறுகிறார். பெயர், பணம், செல்வம், புகழ் என அனைத்தும் கிடைக்கிறது.

2 /6

தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். இதனுடன், ஏப்ரல் 11, 2023 முதல், சனியின் பத்தாம் பார்வை கும்ப ராசியிலிருந்து விருச்சிக ராசியின் மீது விழத்தொடங்கியுள்ளது. சனியின் பத்தாம் பார்வையால் நன்மை பெறும் 3 ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.   

3 /6

சனியின் பத்தாம் பார்வை ரிஷப ராசியின் கர்ம வீட்டில் உள்ளது. இதனால் இவர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். 

4 /6

சிம்ம ராசிக்காரர்களுக்கும் சனியின் பத்தாம் பார்வையினால் நல்ல பலன் கிடைக்கும். சவால்களை எதிர்கொள்வீர்கள். ஆனால் அவற்றை உங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். வியாபாரிகள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். கலைத்துறையுடன் தொடர்புடையவர்களும் ஆதாயம் அடைவார்கள்.

5 /6

சனியின் பத்தாம் பார்வை கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. ஆனால் இந்த நேரம் அவர்களுக்கு நன்மை பயக்கும். நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும்.

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.