பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாட்டிற்கு கேவலம்: ராம்நாத் கோவிந்த்!

சுதந்திர இந்தியாவில் குழந்தைகள் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது வெட்கக்கேடு என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Last Updated : Apr 18, 2018, 02:41 PM IST
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாட்டிற்கு கேவலம்: ராம்நாத் கோவிந்த்! title=

சுதந்திர இந்தியாவில் குழந்தைகள் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது வெட்கக்கேடு என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காஷ்மீரின் கத்ரா பகுதியில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

அப்போது, இந்த சம்பவம் குறித்து அவர் கூறியதாவது;- 

சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது வெட்கக்கேடு என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

கத்வா சம்பவம் எந்த ஒரு சிறுமிக்கும், பெண்ணுக்கும் இனி நடக்கக்கூடாது என்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எந்த மாதிரியான சமுதாயத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும் என்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற மேரி கோம், மனிகா பத்ரா, மிராபாய் சானு, சங்கீதா சானு, மனு பகிர், வினேஷ் போகத், சாய்னா நெய்வால், ஹீனா ஆகியோர் நமக்கு கவுரவத்தை தேடித் தந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். 

Trending News