குரங்கிடம் பாலியல் சீண்டல்; எகிப்து பெண்னுக்கு 3 ஆண்டு சிறை!

வளர்ப்பு பிராணிகள் அங்காடியில் இருந்த குரங்கினை பாலியல் ரீதியா சீண்டிய எகிப்து நாட்டு பெண்மனிக்கு 3 ஆண்டுகள் சிறை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Last Updated : Dec 30, 2018, 03:42 PM IST
குரங்கிடம் பாலியல் சீண்டல்; எகிப்து பெண்னுக்கு 3 ஆண்டு சிறை! title=

வளர்ப்பு பிராணிகள் அங்காடியில் இருந்த குரங்கினை பாலியல் ரீதியா சீண்டிய எகிப்து நாட்டு பெண்மனிக்கு 3 ஆண்டுகள் சிறை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

எகிப்து நாட்டின் மன்சூரா பகுதியில் இருக்கும் செல்ல பிராணி விற்பனை கடை ஒன்றில், கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குரங்கிடன் பாலியல் ரீதியா நடந்துக்கொண்டதாக அந்நாட்டை சேர்ந்த 25 வயது பெண்மனி ஒருவர் குற்றம்சாட்டப்பட்டார்.

சமீபத்தில் தனது நண்பர்களுடன் குறிப்பிட்ட கடைக்கு சென்ற இப்பெண்மனி, கடையில் இருந்த குரங்கின் பிறப்புறுப்பை சீண்டியுள்ளார். பின்னர் அதனால் கிளர்ச்சியடைந்த குரங்கினை கண்டு சிரித்து கூச்சளிட்டுள்ளார். இந்த சம்பவங்களை அவருடன் இருந்த அவரது நண்பர்கள் கைபேசியில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதியேற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தினை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டார். வழக்கினை விசாரித்த நீதிபதிகள், இவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர். 

விசாரணையில் தண்டிக்கப்பட்ட பெண், வேண்டுமென்று இந்த காரியத்தில் ஈடுபடவில்லை எனவும், நண்பர்கள் தனக்கு தெரியாமல் இந்த வீடியோவினை இணையத்தில் பதிவேற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் "பகிரங்க ஆபாச முறைமை" மற்றும் "கசப்புணர்வு" பிரவுகளில் இவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை விதித்துள்ளது.

Trending News