மாட்டிடம் கேள்வி கேட்ட சிறுமி..அதுவும் பதில் சொல்லுதே!! செம க்யூட் வைரல் வீடியோ..

Funny Cow Interview Viral Video : குழந்தை ஒன்று, மாட்டிடம் கேள்வி கேட்டு எடுத்திருக்கும் நேர்காணல், இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 6, 2024, 06:57 PM IST
  • மாட்டை நேர்காணல் செய்த சிறுமி
  • மாடும் பதில் சொல்லுச்சு..
  • வீடியோவை பாருங்க
மாட்டிடம் கேள்வி கேட்ட சிறுமி..அதுவும் பதில் சொல்லுதே!! செம க்யூட் வைரல் வீடியோ.. title=

Funny Cow Interview Viral Video : குழந்தைகள், எது செய்தாலும் அழகுதான். உயரத்தில் வளர ஆரம்பிக்கும் முன்னரே, இவர்கள் எண்ணத்திலும், செயல்களிலும், கற்பனை திறன்களிலும் வளர ஆரம்பித்து விடுகின்றனர். பெற்றோரால் நினைத்து கூட பார்க்க முடியாத விஷயங்களை செய்யும் இவர்கள், பல சமயங்களில் தங்களை அறியாமல் ஆபத்தான விஷயங்களை செய்து, தன்னை பார்த்துக்கொள்பவர்களுக்கு பகீர் கிளப்புவர். 

ஒரு சில குழந்தைகள், ரொம்ப சீரியஸாக செய்யும் விஷயங்களும், பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். குழந்தைகள் அனைவரிடமும் இருக்கும் பொதுவான ஒரு விஷயம், இவை மனிதர்கள் மட்டுமன்றி மிருகங்களிடமும் அதிக அன்புடன் இருக்கும். அதுவும் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை, முயல், கிளி, மாடு உள்ளிட்டவற்றுடன் அதிக நட்பு பாராட்டும். 

மேலும் படிக்க | Viral Video : “காலுக்கு மசாஜ் பண்ணு...” பாகனிடம் செல்லமாக சேட்டை செய்த யானை!

மாட்டை நேர்காணல் செய்த சிறுமி:

அழகான வெள்ளை நிற ஆடை அணிந்த குட்டி குழந்தை ஒன்று, செய்தி நிருபர் போல நிகழ்ச்சி நடத்துகிறார். அதில் விருந்தினராக மாட்டை அழைத்து அதனிடம்  “ம்மா..” என்று மாட்டின் பாஷையிலேயே கேள்வி கேட்கிறார். அதற்கு அந்த மாடும், திரும்ப “ம்மா..என்று கத்துகிறது. 

மாடு தன் கேள்விக்கு பதில் சொன்னதும், அந்த சிறுமி வாயில் கை வைத்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார். சில வினாடிகளே இருக்கும் இந்த வீடியோ, இணையத்தில் தற்போஹ்டு, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது. பல மில்லியன் வியூஸ் மற்றும் ஷேர்ஸ்களையும் இந்த வீடியோ பெற்றிருக்கிறது. 

மாடுகளுக்கு நாம் பேசுவது புரியுமா? 

ஆறறிவு இருக்கும் மனிதர்களுக்கே ஒருவர் பேசுவது இன்னொருவருக்கு புரிவதில்லை. இதில் எங்கிருந்து மாடுகள் நாம் பேசுவதை புரிந்து கொள்ளும்? அவைகளுக்கு மனிதர்கஆள் பேசுவது புரியாது. ஆனால், நாம் பேசும் தொனி, குரலின் தோரனையை வைத்து நாம் அதற்கு ஆணையிடுகிறோமா இல்லையா என்பதை அவை கற்றுக்கொள்ளும். அதிலும் தன்னை வளர்ப்பவரின் குரலைகண்டு கொள்வதிலும் இவை ஸ்மார்டாக இருக்குமாம். அது மட்டுமன்றி, நாம் எந்த உணர்ச்சியுடன் மாட்டிடம் பேசுகிறோம் என்பதையும் மாட்டால் கண்டுகொள்ள முடியுமாம். நீங்கள் கூறுவதை அவற்றால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், நீங்கள் சொல்லும் வேலைகளை செய்யும் அளவிற்கு அவை புரிந்து வைத்துக்கொள்ளும். 

மேலும் படிக்க | மூச்சுவிடும் பூமி... இணையத்தில் வைரலாகும் அதிசய வீடியோ: மிஸ் பண்ணாம பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News