Horrifying Video: தானாக இயங்கிய கார்; பழுது பார்ப்பவர் மீது மோதி நசுக்கிய பயங்கரம்!

இன்றைய சமூக ஊடக காலத்தில், தினம் தினம் பல விதமான அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அந்த வகையில், ஆட்டோமேடிக் கார் ஒன்று தானாக நகர்ந்து சென்றதில் ஏற்பட்ட பயங்கர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 13, 2022, 06:48 PM IST
  • ஆட்டோமேடிக் கார் ஒன்று தானாக நகர்ந்து சென்றதில் ஏற்பட்ட பயங்கர சம்பவம்.
  • சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
  • காணொளி எந்த இடத்தில் எடுக்கப்பட்டது மற்றும் சம்பவத்தின் உண்மையான நேரம் இன்னும் தெரியல்லை.
Horrifying Video: தானாக இயங்கிய கார்; பழுது பார்ப்பவர் மீது மோதி நசுக்கிய பயங்கரம்! title=

இன்றைய சமூக ஊடக காலத்தில், தினம் தினம் பல விதமான அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அந்த வகையில், ஆட்டோமேடிக் கார் ஒன்று தானாக நகர்ந்து சென்றதில் ஏற்பட்ட பயங்கர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழுதடைந்த காரை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு நபர்,  கார் தானாக  இயங்கியதில், இருப்பு கேட்டின் மீது மோதி நசுக்கப்பட்டார்.  அந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. காணொளி எந்த இடத்தில் எடுக்கப்பட்டது மற்றும் சம்பவத்தின் உண்மையான நேரம் இன்னும் தெரியல்லை. சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோவில், காணப்படும் நபர் அனேகமாக ஒரு மெக்கானிக்காக இருக்க கூடும் என நம்பப்படுகிறது. 

ஆட்டோமேட்டிக் கார் ஒன்று பழுதாகிவிட்ட நிலையில், காரின் போனட்டைத் திறந்து, சோதித்து பார்த்த பின், டிரைவிங் இருக்கைக்குத் திரும்பிச் சென்று பரிசோதிக்கிறார். சில வினாடிகளுக்குப் பிறகு, அந்த நபர் மீண்டும் போனட்டைநெருங்கி வருவதைக் காணலாம், அப்போது கார் திடீரென வேகமாக இயங்கி, அவர் மீது மோதியது.  மெக்கானிக்கின் மீது மோதியதில், அந்த நபர் கேட்டுடன் மோதி நசுக்கபப்ட்டார். விபத்து நடந்தபோது ஒரு பெண் தனது குழந்தையுடன் அருகே சுற்றித் திரிவதையும் வீடியோவில் காட்டியது.

மேலும் படிக்க | பேருந்தில் குதிரை போஸ்டர்; தாய் என நினைத்து பின் சென்ற குதிரை குட்டி!

கார் விபத்து வீடியோவை கீழே காணலாம்:

 

 

@ragiing_bull என்ற டிவிட்டர் கணக்கின் மூலம் ட்விட்டரில் வீடியோ வெளியிடப்பட்டது. “தானியங்கி வாகனம் பழுதாகி இருந்தால், வாகனத்தின் முன் நிற்க வேண்டாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை எச்சரிக்கவும். இந்தச் செய்தியை அதிகமாக பகிரவும்,” என்று அந்த நபர் பதிவிட்டுள்ளார். அந்த நபர் எந்த அளவிற்கு கடுமையாக காயமடைந்துள்ளார் என்பது இன்னும் தெரியவில்லை.

மேலும் படிக்க | சென்னையில் கொடூரம்; நாயை கட்டையால் அடித்து கொலை செய்த மனித மிருகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News