ஆள் உயர பாம்பை ஒற்றை கையால் பிடித்து அசத்திய இளைஞர்..! வைரல் வீடியோ..!

Snake Viral Video: ஒரு இளைஞர் பெரிய பாம்பை ஒற்றை கையால் பிடித்து அசத்திய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Nov 10, 2023, 06:38 PM IST
  • பாம்பை கண்டால் படையும் நடுங்கும்.
  • ஒரு இளைஞர் பாம்பை அப்படியே தூக்குகிறார்.
  • இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ.
ஆள் உயர பாம்பை ஒற்றை கையால் பிடித்து அசத்திய இளைஞர்..! வைரல் வீடியோ..! title=

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் பல வினோதமான நிகழ்வுகள் அரங்கேறி வருவதை அடிக்கடி பார்க்கிறோம். வளர்ந்து வரும் சமூக வலைதளங்களின் மாற்றங்களை பார்க்கும் போது, தினம் தினம் எதுவும் நடக்கவில்லை என்றால்தான் அதிசயமாக உள்ளது. எத்தனை உலக நாடுகள் இருப்பினும், அதில் வாழும் மக்களை இந்த சமூக வலைதளம்தான் ஒன்றாக கட்டிப்போட்டுள்ளது.  பல கண்டங்களையும் பல்வேறு தரப்பினரையும் நாடுகள் கடந்து ஒன்றிணைத்துள்ளது நம் கையில் உள்ள சிறிய கைப்பேசி. இதன் மூலம் பரவும் பல விஷயங்கள் அவ்வப்போது அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது வழக்கம். இப்படி வைரலாகும் சில விஷயங்களால் பலர் பயனடைகின்றனர். இருப்பினும், வைரலாகும் ஒரு சில விஷயங்கள், நம் மனதை பதைபதைக்க வைக்கின்றன. அது போல ஒரு வீடியோதான் தற்போது சமூக வலைதளத்தில் சுழன்கு கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க | உங்க மப்புக்கு நான்தான் ஊறுகாயா.. பாம்பை பதம் பார்த்த நபர்: வீடியோ வைரல்

பாம்பை அசராமல் கையில் பிடித்த இளைஞர்..

பாம்புகள், பெரும்பாலும் மிகவும் பயங்கரமான ஊர்வனவற்றில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. பெரும்பாலும், பலருக்கு ஒரு முதன்மையான பயத்தை ஏற்படுத்துகின்றன. அவர்களின் படங்கள் மற்றும் வீடியோக்கள் நம் உடலில் உள்ள முடிகளை நிற்க வைக்கும் அளவிற்கு பயத்தை ஏற்படுத்துகின்றன.  மேலும் பாம்பு பயம் என்பது ஒரு பரவலான மற்றும் இயற்கையான நிகழ்வு ஆகும். நம்மில் பெரும்பாலோர் இந்த விஷ உயிரினங்களிலிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருக்க விரும்புகிறோம். இருப்பினும், அவர்களை வசீகரிக்கும் ஜந்துக்களாக கருதும் துணிச்சலான சிலர் இங்கு உள்ளனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Gupta (@_yashhh._illy)

நாகப்பாம்பின் தலையை உயர்த்தி அச்சுறுத்தும் தோரணையில் ஒருவம் நெருங்கும் போது ஒரு சஸ்பென்ஸ் தருணத்துடன் இந்த வீடியோ தொடங்குகிறது. இந்த வீடியோவை பார்த்துக்கொண்டிருப்பவர்களின் இதயத்தை மேலும் துடிக்க வைக்கும் வகையில், அவர் தனது வெறும் கைகளை மட்டுமே பயன்படுத்தி, நம்பமுடியாத திறமை மற்றும் அச்சமின்மையை வெளிப்படுத்தி, பாம்பை அதன் வாலால் பிடிக்கிறார்.

நெட்டிசன்களின் கருத்துகள்..

வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து, இது இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது, எண்ணற்ற பார்வைகளை ஈர்த்தது மற்றும் அந்த மனிதனின் அசாதாரண துணிச்சலைப் பாராட்டி நெட்டிசன்களிடமிருந்து வியக்க வைக்கும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன. 
ஒருவர், “இதை நம்பவே முடியவில்லை. என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை” என்று கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசனோ, “இவரது துணிச்சல் உண்மையாகவே பாராட்டுக்குரியது. இதை பார்க்கவே நன்றாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு சிலர் இந்த வீடியோ குறித்து அதிருப்தியை தெரிவித்துள்ளனர். “சும்மா செல்லும் இது போன்ற ஜந்துக்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள்..?” என்று ஒரு நெட்டிசன் கோபத்துடன் கேள்வி எழுப்பி இருக்கிறார். இன்னொரு நெட்டிசனோ, “இது போன்ற வீடியோக்கள் பிறரை இந்த செயலை செய்ய தூண்டும். இதை யாரும் ஊக்குவிக்க கூடாது. இது போன்ற செயலை செய்பவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்..” என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்க | ராட்சத பாம்பை கட்டிப்பிடித்தபடி வீடியோ வெளியிட்ட பெண்..கடைசியில் என்ன ஆச்சு பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News