திடீரென கையை கடித்த புலி, அலறிய நபர்: திகிலூட்டும் வைரல் வீடியோ

Scary Viral Video: புலி ஒன்று நபரின் கையை கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி பீதியை கிளப்பி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 21, 2023, 10:33 AM IST
  • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது.
  • இது Wildlifeanimall என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • இதற்கு நெட்டிசன்களிடம் இருந்து பல ரியாக்ஷன்கள் வர ஆரம்பித்துள்ளன.
திடீரென கையை கடித்த புலி, அலறிய நபர்: திகிலூட்டும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

மிருகக்காட்சிசாலையில் விலங்குகளை கிண்டல் செய்யும் தவறை மக்கள் பல முறை செய்கிறார்கள். ஆனால், அதன் விளைவு சில சமயம் அபாயகரமாக இருந்துவிடுகிறது. காரணமே இல்லாமல் மக்கள் விலங்குகளை சீண்டுவதை நாம் சமூக ஊடகங்களில் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். 

சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ வெளியானது. ஒரு நபர் சிங்கத்தின் கூண்டில் கையை வைத்துக்கொண்டு கேலி கிண்டலுடன் வேடிக்கை செய்துகொண்டிருக்க, சில நொடிகளில் சிங்கம் அவரது கையை பிடித்தது. இந்த வீடியோ பயனர்களிடையே பீதியை கிளப்பியது. இது போன்ற மற்றொரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இது புலி தொடர்பானது. இதில் அந்த நபர் புலிக்கு உணவளிக்க கூண்டில் கையை வைத்துள்ளார். ஆனால் புலி வேறு ஒரு எண்ணத்தில் இருக்கிறது. அந்த நபரின் அருகில் சென்ற புலி, அவரது கையை கடிக்க ஆரம்பித்தது. புலியின் தாக்குதலால் அச்சமடைந்த அந்த நபர் அலறத் தொடங்கினார். 

நபரின் கையை பிடித்த புலி 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், அந்த நபர் மிருகக்காட்சிசாலையை பார்வையிட சென்றிருப்பதை காண முடிகின்றது. புலியின் கூண்டைப் பார்த்தவுடன் அவர் நிற்கிறார். புலிக்கு ஏதோ ஊட்ட முயல்வது போல் தெரிகிறது. அந்த நபர் கூண்டில் கையை வைத்து புலியை அவரிம் அழைக்கிறார். புலி முதலில் அப்பாவி போல் நடித்து பின்னர் கையை பிடித்து இழுக்கிறது. அதன் ஆக்ரோஷத்தை பார்த்தால் முழு கையையும் மென்று சாப்பிட்டு விடுவது போல் தோன்றுகிறது.  அச்சத்தின் உச்சிக்கு சென்ற அந்த நபர் வலி தாங்க முடியாமல் கத்த ஆரம்பித்தார்.

மேலும் படிக்க | நச்சுனு ஒரு கிஸ்ஸூ.. குரங்கிடம் மயங்கிய பூனை: Viral Video

புலியிடம் மாட்டிய நபரின் வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. இது Wildlifeanimall என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்களிடம் இருந்து பல ரியாக்ஷன்கள் வர ஆரம்பித்துள்ளன. பல வியூஸ்களும் லைக்குகளும் குவிந்த இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | லாரிக்கு கீழ் சிக்கிய குழந்தை, நம்ப முடியாத அதியம்: திக் திக் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News