கர்ப்ப காலத்தில் மீண்டும் கர்ப்பமான பெண்; அமெரிக்காவில் நிகழ்ந்த அதிசயம்

அமெரிக்காவில் ஒரு அதிசயமான வினோதமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள 30 வயது பெண் ஒருவர் கர்ப்பத்தின் நடுவில் மீண்டும் கர்ப்பமாகியுள்ளது, மிகவும் வியப்பையும், ஆச்சர்யத்தையும் கொடுத்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 1, 2022, 02:27 PM IST
  • அமெரிக்காவில் ஒரு அதிசயமான வினோதமான சம்பவம்
  • சூப்பர்ஃபீடேஷன் நிலையில் ஏற்படும் நிகழ்வு.
  • வெவ்வேறு நேரங்களில் கருவுற்ற முட்டைகள்.
கர்ப்ப காலத்தில் மீண்டும் கர்ப்பமான பெண்; அமெரிக்காவில் நிகழ்ந்த அதிசயம்  title=

அமெரிக்காவில் ஒரு அதிசயமான வினோதமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள 30 வயது பெண் ஒருவர் கர்ப்பத்தின் நடுவில் மீண்டும் கர்ப்பமாகியுள்ளது, மிகவும் வியப்பையும், ஆச்சர்யத்தையும் கொடுத்துள்ளது. இதில் மேலும் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அவர் தனது பிரசவத்தில் ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

3 கருக்கலைப்புகள்

அமெரிக்காவை சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் காரா வின்ஹோல்ட். ஏற்கனவே கர்ப்பமாக இருந்த நிலையில் கர்ப்ப காலத்தில் மீண்டும் கர்ப்பமானாள். வின்ஹோல்ட் இதற்கு முன்பு 3 முறை கருக்கலைப்பு செய்திருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வின்ஹோல்ட் கர்ப்பமானார். ஒரு மாதம் கழித்து, நடத்தபப்ட்ட பரிசோதனையில் அவள் மீண்டும் கர்ப்பமாக  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.

மேலும் படிக்க | வாழைப்பழத்தை வெறுக்கும் ஆண் எலிகள்; ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்

சூப்பர்ஃபீடேஷன் நிலையில் ஏற்படும் நிகழ்வு

இந்த தனித்துவமான மருத்துவ நிலை சூப்பர்ஃபீடேஷன் என்று அழைக்கப்படுகிறது. இதில், தற்போதைய கர்ப்ப காலத்தில் மீண்டும் கர்ப்பம் உண்டாகிறது. இது முதல் சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் நிகழலாம் என ஹெல்த்லைன் இதழில் கூறப்பட்டுள்ளது. இறுதியில், பிரசவ நேரத்தில்அவளுக்கு 6 நிமிட வித்தியாசத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தன.

வெவ்வேறு நேரங்களில் கருவுற்ற முட்டைகள்

என்ன நடந்தது என்று மருத்துவரிடம்  விளக்கம் கேட்ட காராவிற்கு, மருத்துவர் இது குறித்து கூறினார். இரண்டு முறை முட்டைகள் வெளியாகி இரண்டும் வெவ்வேறு கால இடைவெளியில் கருவுற்றிருக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் கூறினார். வின்ஹோல்ட் கூறுகையில், எனது கர்ப்ப காலத்தில் நடந்த அனைத்தும் ஒரு அதிசயம் என்று நான் 100% நம்புகிறேன்.

கருகலைப்பு காரணமாக உடல் நல பாதிப்பு

வின்ஹோல்டிற்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். அவர் 2018 இல் பிறந்தார். தம்பதிகள் மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தபோது, ​​​​அவர்கள் மூன்று முறை கருச்சிதைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வின்ஹோல்ட்டிற்கு தொடர்ச்சியான கருச்சிதைவு காரணமாக உடல் நல பாதிப்பும் இருந்தது. எனவே அவர் மீண்டும் கர்ப்பமாகிவிடுமோ என்று பயந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Strychnine: துடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷம்; எதிரிகளிடம் ரஷ்யா பயன்படுத்தியதா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News