Viral Video: பாம்புகளை கொத்தாக அள்ளி அசால்டாய் எடுக்கும் நபரின் வைரல் வீடியோ

சமூக ஊடக உலகத்தில் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும்,  நம்மை வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது அதிர்ச்சி அளிக்கக்க்கூடிய அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 9, 2022, 01:41 PM IST
  • இணைய உலகில், பாம்பு வீடியோக்கள் தான் எளிதில் வைரலாகும்.
  • மனிதர்கள் மட்டுமல்ல, பல உயிரினங்களும் பாம்புகளை கண்டால் பயந்து ஓடும்.
  • பாம்பு என்றால் படையே நடுங்கும்.
Viral Video: பாம்புகளை கொத்தாக அள்ளி அசால்டாய் எடுக்கும் நபரின் வைரல் வீடியோ title=

சமூக ஊடக உலகத்தில் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும்,  நம்மை வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது அதிர்ச்சி அளிக்கக்க்கூடிய அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகின்றன. இணைய உலகில், நகைச்சுவை, நடனம், வேடிக்கையான நிகழ்வுகள் போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு வீடியோக்கள் தான் எளிதில் வைரலாகும். 

இணைய உலகத்தில் காட்டு விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அதிலும் ஆபத்தான பாம்பு,  ராஜ நாகம் போன்ற பாம்புகளின் வீடியோக்கள் மிகவும்  அதிகம். பாம்பு என்றாலே படையும் நடுங்கும். இருப்பினும், பாம்பு வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக உள்ளது. இவை சில சுவாரஸ்யமாகவும் சில சமயம் திகிலாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் இதனை பார்க்க விரும்புகிறார்கள். 

பாம்புகளில் பல வகை உண்டு. அவற்றில் பெரும்பாலானவை மிகவும் விஷத்தன்மை கொண்டவை. அவை ஒரு முறை கடித்தால், அவை மனிதனை மரணத்திற்கு தள்ளும். மனிதர்கள் மட்டுமல்ல, பல உயிரினங்களும் பாம்புகளை கண்டால் பயந்து ஓடும். அதை தான் பாம்பு என்றால் படையே நடுங்கும் என்கிறார்கள். 

இருப்பினும், பாம்புகளை கண்டு அஞ்சாத சிலரும் உள்ளனர். பாம்புகளை அசால்டாக கையாளும் ஒரு நபரின் வீடியோ ஒன்று, சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதில் ஒரு ஆச்சரியமான காட்சி காணலாம். வீடியோவில், ஒரு நபர் தனது கைகளில் விஷப்பாம்புகளை கைகளில் அள்ளி முழுவதுமாக தூக்குகிறார்.

மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒருவர் தனது நண்பர்களுடன் காட்டிற்கு வருவதையும், அவருடன் ஒரு பெரிய பையும் இருப்பதையும் நீங்கள் காண்பீர்கள். உண்மையில், அந்த நபர் பையில் இருந்து பாம்புகளை வெளியே எடுத்து காட்டில் விடுகிறார் .வீடியோவில் பல விஷ பாம்புகள் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம். 

வைரலாகும் வீடியோவை இங்கே பாருங்கள்:

பாம்புகள் தொடர்பான இந்த வீடியோவை பார்த்து இணையவாசிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். naturelife_ok  என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!

மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News