Watch: மது கொடுக்காததால் ஏர் இந்தியா ஊழியரை கழுவி ஊற்றிய பெண்....

ஏர் இந்திய விமானத்தில் விமான பைலட் மீது எச்சில் துப்பி கெட்டவார்த்தைகளால் திட்டி வெளிநாட்டு பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூகவலதலத்தில் வைரலாக பரவிவருகிறது....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 14, 2018, 12:35 PM IST
Watch: மது கொடுக்காததால் ஏர் இந்தியா ஊழியரை கழுவி ஊற்றிய பெண்.... title=

ஏர் இந்திய விமானத்தில் விமான பைலட் மீது எச்சில் துப்பி கெட்டவார்த்தைகளால் திட்டி வெளிநாட்டு பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூகவலதலத்தில் வைரலாக பரவிவருகிறது....

ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் மதுபோதையில் பெண் ஒருவர் மது பானம்  கொடுக்காததால் தகராறில் ஈடுபட்டு உள்ளார். கடந்த சனிக்கிழமை லண்டனிலிருந்து மும்பை வந்த ஏர் இந்தியாவின் IA 131 விமானத்தில் அயர்லாந்தைச் சேர்ந்த பெண் அதிகளவு மது கேட்ட போது விமானப் பணிக்குழு மதுபானம் வழங்க மறுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த பெண் அனுமதியின்றி பாட்டிலை எடுத்து மது அருந்தியுள்ளார். மேலும் அவர், ஏர் இந்தியா விமானப் பணிக்குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் ஆவேசமாக திட்டியுள்ளார். தாம் ஒரு சர்வதேச குற்றவியல் வழக்கறிஞர் என்றும், ரோஹிங்யாக்களுக்காக தாம் பணமே பெறாமல் இலவசமாக வாதிடும் போதும், தமக்காக ஒரு கோப்பை மது கூட அதிகமாகத் தர மறுக்கிறாயா? என ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

அந்த விமானம் லண்டன் சென்றடைந்ததும் அந்த பெண் கைது செய்யப்பட்டு உள்ளார். லண்டனுக்கு சென்ற அந்த ஏர் இந்திய விமானத்தின் நேரம் மற்றும் விமானத்தின் தகவல் தெரியவில்லை. இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்தே வீடியோ காட்சியானது கீழே இணைக்கப்பட்டுள்ளது.... 

 

Trending News