ஆடி அமாவாசை 2024: தர்ப்பணம் கொடுத்து வழிபடவும்.. பித்ரு தோஷம் நீங்கும்

Aadi Amavasai 2024: இந்த ஆண்டு ஆடி மாதம் அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் தர்ப்பணம் செய்து கடைபிடிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 4, 2024, 09:34 AM IST
  • மிகுந்த பலன்களைக் கொடுக்கும் என்கிறது சாஸ்திரம்.
  • அமாவாசை அன்று அனைத்து முன்னோர்களையும் நினைவு கூற வேண்டும்.
  • குளங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.
ஆடி அமாவாசை 2024: தர்ப்பணம் கொடுத்து வழிபடவும்.. பித்ரு தோஷம் நீங்கும் title=

Aadi Amavasya 2024: நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன்னோர்களை ஒரு போதும் மறக்கக் கூடாது. நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். இந்த கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி அன்று நமது பித்ருக்களை அதாவது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வோம்.

அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதா மாதம் வரும் அமாவாசையில், ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆகியவை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாள். அந்த வகையில் ஆடி மாதத்தின் அமாவாசை இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செய்யும் பித்ரு வழிபாடுகள், ஏழைகளுக்கு வழங்கும் தான தர்மங்கள் ஆகியன மிகுந்த பலன்களைக் கொடுக்கும் என்கிறது சாஸ்திரம்.

மேலும் படிக்க | இன்னும் 8 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்

இந்த நிலையில் அமாவாசை அன்று அனைத்து முன்னோர்களையும் நினைவு கூற வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு, அதாவது கடல் அல்லது ஆறுகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து, அவர்களது ஆசியை பெற தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. இதனால் பித்ரு தோஷம் அனைத்தும் நீங்கி, குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். அதே நேரத்தில் இந்த புண்ணிய தினத்தில் வேப்பமரத்துடன் இருக்கும் அரசமரத்தை சுற்றி வருவது மிகுந்த நன்மைகளை தரும்.

நமது தலைமுறைகள் சுகமாய் நிம்மதியாய் இருக்க தர்ப்பணம் கொடுக்க வேண்டியது முக்கியம். புனித நீர் நிலைகளுக்கு, அதாவது கடல் அல்லது ஆறுகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து, அவர்களது ஆசியை பெற தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரை, மகாநதிகள், ஆறுகள், குளங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.

பித்ருக்களுக்கு பூஜை செய்து, அந்தணர்களுக்கு அரிசி பருப்பு போன்ற தானியங்களையும், பூசணிக்காய், வாழைக்காய், போன்ற காய்கறிகளையும் தானம் கொடுப்பது சிறப்பு. பின்னர் வீட்டில் இருக்கும் முன்னோர் படங்களுக்கு மாலை அணிவித்து, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வணங்கி, அதை காக்கைக்கு வைத்து பிறகே சாப்பிட வேண்டும்.

நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அமாவாசை நாளில் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். இதனால் சகல வித நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பின்னர் ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் அன்னதானம் கொடுப்பது சிறப்பு. அமாவாசை நாளில் உணவின்றி தவிப்பவர்கள்,ஏழைகள், பசியோடு இருப்பவர்களைத் தேடிச்சென்று தானம் கொடுங்கள். இதனால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

அமாவாசை நாளில் ஆடை தானம் செய்வதால் வாழ்வில், தோஷங்கள் விலகி, பிரச்சனைகள் நீங்கும். புதிய ஆடைகளை தானம் செய்வதால் ஆயுள் விருத்தி உண்டாகும். நீண்ட நாட்களாக வட்டி வரும் நோய்கள் நீஞ்கும். மேலும், கண்டாதி தோஷம் விலகும். உங்கள் பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும். பசு தானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பித்ருசாப தோஷங்கள் விலகும். எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வதால் பித்ருக்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

அமாவாசை தினத்தில் எறும்பு, காகம், நாய், பூனை, பசு மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் ஒரு சேர கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நமது வாழ்வில் வரும் இன்பங்கள், இன்னல்கள் யாவும் நாம் எமது முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப அமைகிறது. அதில் பித்ருக்களுக்கான காரியமும் ஒன்றாகும். எனவே, முன்னோர்களின் ஆசிகளை முழுமையாக பெற சிரத்தையுடன் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும். அதில் தவறினால் பித்ருக்களின், அதாவது முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

மேலும் படிக்க | 18 ஆண்டுக்கு பிறகு சூரியன் கேது சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, அனைத்திலும் வெற்றி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

Trending News