எச்சரிக்கை! இன்னும் 4 நாட்களுக்கு பிறகு இந்த ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும்

Mangal Gochar 2023: செவ்வாய் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் தளபதியாக கருதப்படுகிறது. மார்ச் 13ல் செவ்வாய் மிதுன ராசியில் பெயர்ச்சியாகப் போகிறார். இதன் போது பல ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் அதிகமாகும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 8, 2023, 03:06 PM IST
  • மார்ச் 13ல் செவ்வாய் பெயர்ச்சி.
  • எந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம்.
எச்சரிக்கை! இன்னும் 4 நாட்களுக்கு பிறகு இந்த ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் title=

செவ்வாய்ப் பெயர்ச்சி 2023: ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது. தற்போது மார்ச் மாதம் தொடங்கி 8 நாட்கள் முடிந்துவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், பல பெரிய கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறி வருகின்றனர். அதன்படி செவ்வாய் கிரகம் மார்ச் 13-ம் தேதி மிதுன ராசிக்குள் நுழைகிறார். செவ்வாய் பெயர்ச்சி சனியுடன் நவம் பஞ்சம யோகம் உருவாகி வருகிறது. கிரகங்களின் தளபதியான செவ்வாயின் பெயர்ச்சியால் சில ராசிக்கார்களுக்கு நன்மை உண்டாகும். மறுபுறம், சில ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அசுப காலங்கள் நிறைந்ததாக இருக்கும்.

இந்த நிலையில் மார்ச் 13-ம் தேதி காலை 05.33 மணிக்கு மிதுன ராசியிலும், மே 10-ம் தேதி பிற்பகல் 2.13 மணிக்கு கடக ராசியிலும் பெயர்ச்சியாகப் போகிற செவ்வாய். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு இக்கட்டான நேரமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | 700 ஆண்டுக்குப் பிறகு கிரகங்களின் அபூர்வ சேர்க்கை, 4 ராசிகளுக்கு மெகா ஜாக்பாட்

ரிஷபம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமற்றதாக இருக்கும். இதன் போது, ​​இந்த ராசிக்காரர்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில், குழந்தைகளுக்கு உங்கள் ஒத்துழைப்பு தேவைப்படும். அலுவலகத்தில் சக ஊழியருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சற்று சிந்தித்து நடக்கவும்.

மிதுனம்
மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி நடக்க உள்ளது. இந்த ராசிக்காரர்கள் செவ்வாயின் பெயர்ச்சியால் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதே நேரத்தில், இடமாற்றத்திற்கான வாய்ப்பும் உள்ளது.

விருச்சிகம்
ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி நல்லதல்ல. இந்த மாற்றத்தால், எதிர் ராஜயோகம் உருவாகிறது. இந்த ராசிக்காரர்கள் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும்.

தனுசு
செவ்வாய் இந்த ராசிக்கு 7ம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். சிறிய சிரமங்களை எதிர்கொள்வது உங்கள் பிரச்சினைகளை அதிகரிக்கும். இக்காலத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலர் உங்கள் இமேஜை கெடுக்க முயற்சிப்பார்கள். இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Sani Palan: நண்பர்களையும் பகைவராக்கும் சனி உதயம்! எச்சரிக்கை 3 ராசிக்காரர்களே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News