கேந்திர திரிகோண ராஜயோகம்: சனியால் வரும் பம்பர் பலன்கள்... இந்த 3 ராசிகளுக்கு மட்டும்!

Kendra Trikona Raja Yoga: சனியின் வக்ர பெயர்ச்சியால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் சுப பலன்களை தரும். அந்த ராசிகள் குறித்து இதில் காண்போம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 2, 2023, 02:44 PM IST
  • 30 ஆண்டுகளுக்கு பிறகு, சனி கும்பத்தில் அமைந்துள்ளது.
  • வரும் ஜூன் 17இல் சனி வக்ர பெயர்ச்சியை தொடங்குகிறது.
  • இதனால், கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகும்.
கேந்திர திரிகோண ராஜயோகம்: சனியால் வரும் பம்பர் பலன்கள்... இந்த 3 ராசிகளுக்கு மட்டும்! title=

Kendra Trikona Raja Yoga: நீதியின் கடவுளான சனியின் வக்ர பார்வை ஒரு வாழ்வில் பெரும் பாதிப்பை உருவாக்கும். மறுபுறம், சனியின் அருள் பிச்சைக்காரனை அரசனாக்குகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி அதன் அசல் திரிகோண ராசியான கும்பத்தில் அமைந்துள்ளது. 

வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கும்ப ராசியில் சனி இருக்கும். அதாவது, அடுத்த 15 நாட்களுக்குப் பிறகு ஜூன் 17ஆம் தேதி அன்று சனி தனது வக்ர பெயர்ச்சியை தொடங்குகிறது. கும்பத்தில் சனியின் வக்ர பெயர்ச்சி கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்குகிறது. 

இது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். ஆனால், இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும், சனியின் வக்ர பெயர்ச்சியால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம் மிகவும் சுப பலன்களைத் தரும். இவர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சில நல்ல செய்திகள் வந்து சேரும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகம் சுப பலன்களைத் தரும் என்பதை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | ராகு பெயர்ச்சி: 153 நாட்கள் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை... பணத்துக்கு பஞ்சம் இருக்காது!!

கேந்திர திரிகோண ராஜயோகம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்

மேஷம்

சனியின் வக்ர பெயர்ச்சியால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இவர்கள் பண பலன்களைப் பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். தொழிலில் வெற்றி கிடைக்கும். 

ரிஷபம்

சனியின் வக்ர பெயர்ச்சியால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த உங்களின் வேலைகள் திடீரென முடிவடையும். புதிய வேலைக்கான உங்கள் தேடலும் நிறைவடையும். பெரிய பதவி மற்றும் அதிக ஊதியம் கிடைக்கும் வேலையில் நீங்கள் சேர வாய்ப்பதிகம். உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும்.

சிம்மம் 

கேந்திர திரிகோண ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிறைய பலன்களைத் தரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். எங்கிருந்தோ பணம் கிடைக்கும். மகாலட்சுமியின் ஆசீர்வாதத்துடன், உங்களுக்கு பல வழிகளில் வருமானம் கிடைக்கும். செயல்களில் வெற்றி உண்டாகும். தடைப்பட்டுப்போன வேலைகள் மீண்டும் தொடங்கும். உங்கள் தலைமைத்துவ திறன் சிறப்பாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பத்ர புருஷ் ராஜயோகம்: மிதுன ராசியில் புதன் சஞ்சரிப்பதால் 3 ராசிக்காரர்களுக்கு பண மழை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News