ரிஷபத்தில் வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாயினால் பணத்தை அள்ளும் ‘சில’ ராசிகள்!

Sevvai Vakra Peyarchi: ஜனவரி 13 அன்று செவ்வாய் கிரகம் வக்ர நிவர்த்தி அடைந்த நிலையில் 4 ராசிக்காரர்கள் பணத்தை அள்ளப்போகிறார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 16, 2023, 12:28 AM IST
  • செவ்வாய் கிரகத்தின் அபரிமிதமான ஆசீர்வாதங்களைப் பெறக்கூடிய 4 ராசிகள்.
  • உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும்.
  • செவ்வாய் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் தளபதியாக கருதப்படுகிறது.
ரிஷபத்தில் வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாயினால் பணத்தை அள்ளும் ‘சில’ ராசிகள்! title=

ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்: ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் தளபதியாக கருதப்படுகிறது. அவர் தைரியம் மற்றும் நிலத்தின் காரணியாகக் கருதப்படுகிறார். செவ்வாய் கிரகம் சுப ஸ்தானத்தில் இருக்கும் நபர்களுக்கு ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைத் தருகிறது. அவர் தனது நிலையை மாற்றும்போதோ அல்லது தனது ராசியை மாற்றும்போதோ, அது 12 ராசிகளையும் பாதிக்கிறது.

செவ்வாய், ஜனவரி 13, 2023 அன்று, அதிகாலை 4:25 மணி முதல் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதுவரை, வக்ர நிலையில் இருந்தார். அக்டோபர் 30 வரை வக்ர நிவர்த்தி அடைந்த நிலையில் ரிஷப ராசியில் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் செவ்வாய் கிரகத்தின் அபரிமிதமான ஆசீர்வாதங்களைப் பெறக்கூடிய 4 ராசிகள் உள்ளன. அன்னை லக்ஷ்மி இவர்களிடம் அருளை அள்ளி வழங்குவதால் இவர்களுக்கு பணம் நிறைய கிடைக்கும்.

மேஷம்

செவ்வாய் தைரியத்தின் காரணியாக இருப்பதால், மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவார்கள். பண ஆதாயத்தால் பொருளாதார பக்கம் வலுப்பெறும். வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியான தகவல் பரிமாற்றம் இருக்கும். ஆன்மீக பயணம் செல்லலாம்.

மேலும் படிக்க | மீனத்திற்கு செல்லும் ராகுவினால் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் தான்!

மிதுனம்

செவ்வாயின் வக்ர நிவர்த்தியினால் மிதுன ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகம். உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். அதே சமயம், இடமாற்றத்தால் புதிய பொறுப்பு கிடைத்து மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த பொறுப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மங்கரகரமான வேலைகளை வீட்டில் செய்யலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் வக்ர நிவர்த்தி சுப பலன்களைத் தருவார். இந்த நேரத்தில், வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும், இது பொருளாதார நிலையை வலுப்படுத்தும். இந்த நேரத்தில் புதிய தொடர்புகள் நிறுவப்படும். இது வரும் காலத்தில் உங்களுக்கு பயனளிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் செவ்வாய் வக்ர நிவர்த்தியினால் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள். உத்தியோகம் அல்லது பணியிடத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். வீட்டில் மகிழ்ச்சிக்கான வழிகள் அதிகரிக்கும் மற்றும் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | சனிப் பெயர்ச்சி 2023: பட்ட பாடு அனைத்தும் போதும் என நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்!

மேலும் படிக்க | பொங்கலில் உருவாகும் திரிகிரஹி யோகம்: இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News