செவ்வாய் மற்றும் சுக்கிரன் கிரகங்களால் உருவாகும் ராஜயோகத்தால் பலனடையும் 3 ராசிகள்

Planets Transit: சுக்ரனும் செவ்வாயும் நேர் பார்வையில் பார்த்து ராஜயோகத்தை உருவாக்குகிறார்கள். இந்த ராஜயோகம் டிசம்பர் 5ம் தேதி வரை சாதகமாக இருக்கும். ராஜயோகத்தால் செல்வத்தில் திளைக்கவிருக்கும் ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 23, 2022, 06:52 AM IST
  • சொந்த வீட்டை மாற்றி யோகம் அளிக்கும் கிரகங்கள்
  • ராஜயோகத்தை உருவாக்கும் செவ்வாய் மற்றும் சுக்கிரன்
  • ராஜயோகத்தின் பயனை அறுவடை செய்யும் 3 ராசிகள்
செவ்வாய் மற்றும் சுக்கிரன்  கிரகங்களால் உருவாகும் ராஜயோகத்தால் பலனடையும் 3 ராசிகள் title=

ராஜயோகம் என்பது ஒரு ராசியில் இரு கிரகங்கள் சஞ்சரிக்கும்போது உருவாகும், அல்லது இரு கிரகங்களும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும்போது உருவாகும் யோகம் ஆகும். நவம்பர் 13ம்தேதியன்று ரிஷபத்தில் நுழைந்த செவ்வாய், சுக்கிரனுடன் நேர் பார்வைக்கு வந்து ராஜயோகத்தை ஏற்படுத்தினார். இந்த யோகம் டிசம்பர் 5ம் தேதி வரை இருக்கும், ஏனென்றால், சுக்கிரன் டிசம்பர் 5ம் தேதியன்று தனுசு ராசிக்கு மாறிவிடுவார். அதன் பிறகு நேர் பார்வை மாறிவிடும் என்பதால், ராஜயோகம் அஸ்தமித்துவிடும்.

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் தாக்கம் ஒரு நபரின் இயல்பில் தெரியும். ஒவ்வொரு நபரின் இயல்பும், விருப்பு வெறுப்புகளும் வேறுபட்டவை. அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். பிறப்பிலேயே அதிர்ஷ்டசாலிகளாகும் வரம் ஒரு சிலருக்கே  உண்டு. ஆனால், ராசி மாற்றங்களினால் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களினால் வாழ்வில் அதிர்ஷ்டம் பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.

மேலும் படிக்க | விருச்சிகத்தில் உதயமாகும் சுக்கிரன் ‘3’ ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார்!

தற்போது செவ்வாய் சுக்கிரனின் ராசியிலும், சுக்கிரன் ராசியிலும் பரிவர்த்தனையாகி, ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். இந்த இரு சுப கிரகங்களும் யாருக்கு சுப பலன்களை கொடுக்கின்றன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
 
ரிஷபம்: செவ்வாய் கிரகம், ரிஷப ராசியின், ஏழாவது வீட்டில் லக்னத்தில் சஞ்சரிப்பதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு தைரியமும், வலிமையும் அதிகரிக்கும். ஆடம்பர செலவு செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். அதற்கான பணமும் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.  பெண்களால் ஆதாயம் உண்டு. புதிய தொழில் துவங்கும் வாய்ப்பும் கிடைக்கும். பிரபலமாகும் காலம் இது. 

மேலும் படிக்க | மீனத்துக்கு எச்சரிக்கை! சுப செலவு எந்த ராசியினருக்கு?
 
கடக ராசி: கடக ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சுக்கிரனும், பதினொன்றாம் வீட்டில் செவ்வாயும் உள்ளனர். காதலர்-காதலிகளுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். பெண் வணிகர்கள் பெரிய ஆர்டரைப் பெறலாம். இந்த ராஜயோஅக்ம், பெண்களுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். தொழிலில் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு: தனுசு ராசிக்கு ஆறாம் வீட்டில் செவாயும், 12ம் வீட்டில் சுக்கிரனும் சஞ்சரிக்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் தனுசு ராசியினருக்கு மிகவும் நன்மை பயக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு பணம் மற்றும் செல்வாக்கு கூடும். தடைபட்ட வேலைகள் நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான காலம் இது. தொழில் துறையில் ஈடுபட்டவர்களுக்கும் சாதகமான காலம் இது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Weekly Horoscope (November 21-27): மேஷம் முதல் கன்னி வரையிலான வார பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News