சனியின் 'வக்ர பார்வை' : 2023 வரை மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்!

நீதி தேவனான சனி பகவான் கடந்த 12 ஜூலை 2022 அன்று காலை 10.28 மணிக்கு மகர ராசிக்குள் நுழைந்தார். ஜனவரி 17, 2023 வரை சனி இந்த ராசியில் இருப்பார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 4, 2022, 02:39 PM IST
  • சனி 2023 ஜனவரி வரை வக்ர பார்வையை பெறும் ராசிகள்.
  • சனி நீதியின் கடவுள் என்பதால், செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார்.
  • சனிக்கிழமை தோறும் சனி கோவிலில் தீபம் ஏற்றுவது நல்லது.
சனியின் 'வக்ர பார்வை' : 2023 வரை மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்! title=

சனி பெயர்ச்சி 2022: சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றுகிறது. ஆனால் 2022 ஆம் ஆண்டில், சனி கிரகம் இதுவரை 2 முறை ராசியை மாற்றியுள்ளது. நீதி தேவனான சனி பகவான் கடந்த 12 ஜூலை 2022 அன்று காலை 10.28 மணிக்கு மகர ராசிக்குள் நுழைந்தார். ஜனவரி 17, 2023 வரை சனி இந்த ராசியில் இருப்பார். சனி தற்போது வக்ர நிலையில் உள்ளார். கிரகங்களின் நீதிபதியான மகர ராசியில் சனி இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் பலனும், சில ராசிகளில் சனி தசை பாதிப்பும் உள்ளது. ஜனவரி 2023 வரை எந்தெந்த ராசிகளில் சனி தசை இருக்கும் அறிந்து கொள்ளலாம்.

சனி திசை இந்த இரண்டு ராசிகளிலும் இருக்கும்

மகர ராசியில் சனி தேவன் வக்ர நிலையில் உள்ளார். மகர ராசிக்கு சனிபகவான் வருவதால் மகரம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி நடக்கிறது. மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தசை நடக்கிறது.

மேலும் படிக்க | நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்

சனி தசையின் பாதிப்பு

சனி திசை மற்றும் எழரை நாட்டு சனியினால் பாதிக்கப்பட்டவர்கள் உடல், நிதி மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனுனும் ​​சனி பரிகாரங்களால் அசுப பலன்கள் குறையும்.

கும்ப ராசியில் நுழையும் சனி

மகர ராசிக்குப் பிறகு சனி மீண்டும் கும்ப ராசிக்குள் நுழைவார். சனி கும்ப ராசிக்கு வந்தவுடனேயே தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி விலகும். இதன் பிறகு சனியின் ஏழரை நாட்டு சனியின் பலன் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு இருக்கும். அதே சமயம் மிதுனம் மற்றும் துலாம் ராசிகளில் இருந்து சனி தசையின் தாக்கம் நீங்கி கடகம் மற்றும் விருச்சிக ராசிகளில் சனி தசை ஆரம்பமாகும்.

சனி தசை நடக்கும் போது ஏற்படும் பாதிப்புகள்

சனி நீதியின் கடவுள் என்பதால், செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். சனி தசை வரும் போது அந்த ஜாதகர் பொதுவாக நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார். ஆனால், முடிவில் அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார்.

மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை சனி பகவான் மேற்கொள்கிறார். சனி தசை நடக்கும் போது உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் ஆடை வரை எளிமையை கடைப்பிடிக்க வேண்டும். சனிக்கிழமை தோறும் சனி கோவிலில் தீபம் ஏற்றுவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News