WC 2023: ஹர்திக் வந்தால்.. இந்திய அணியில் இருந்து வெளியேறும் அந்த வீரர் யார்?

Cricket News In Tamil: ஐசிசி உலகக்கோப்பை 202 தொடரில் மீண்டும் ஹர்திக் வந்தால் எந்த வீரருக்கு அணியில் இடம் கிடைக்காது? இந்திய அணியில் இருந்து வெளியேறும் அந்த வீரர் யார்? என்பதைக் குறித்து ஆராய்வோம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 31, 2023, 07:24 PM IST
  • லீக் ஆட்டங்கள் முடியும் வரை ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்ப மாட்டார்.
  • வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா காயமடைந்தார்.
  • ஹர்திக் பாண்டியா அரையிறுதி போட்டிக்கு அணிக்கு திரும்புவார்.
WC 2023: ஹர்திக் வந்தால்.. இந்திய அணியில் இருந்து வெளியேறும் அந்த வீரர் யார்? title=

Hardik Pandya Latest News: ஹர்திக் பாண்டியா காயமடைந்த பிறகு, அணியில் இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த இரண்டு வீரர்களும் அற்புதமாக விளையாடினார்கள். இந்த இருவரும் ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாத ஏக்கத்தை உணர விடவில்லை. அந்த இரண்டு வீரர்கள் யார் என்றால், முகமது ஷமி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆவார்கள். டீம் இந்தியாவுக்காக முகமது ஷமி அற்புதமாக செயல்பட்டார். அதேபோல இங்கிலாந்துக்கு எதிராக 49 ரன்கள் எடுத்து முக்கியமான இன்னிங்ஸ் ஆடிய சூர்யகுமார் யாதவும் இந்திய அணி வெற்றிக்கு உதவியாக இருந்தார். இந்த இரண்டு பேரும் ஆடிய ஆட்டத்தை வைத்து பார்த்தால், அடுத்த போட்டிக்கான அணியில் அவர்களது இடத்தை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி உள்ளனர். ரசிகர்களும் அதைதான் விரும்புகின்றனர். 

தற்போது கேள்வி என்ன வென்றால், ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) குணம் அடைந்து அணிக்கு திரும்பினால், யார் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படுவார்? இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்ற கேள்வி அனைவரின் மனதில் எழுந்துள்ளது. அதுக்குறித்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

உலகக்கோப்பை 2023 அரையிறுதியில் இந்தியா?

மறுபுறம், இந்திய அணி வட்டாரத்தில் கிடைத்த தகவலின்படி, லீக் நிலை ஆட்டங்கள் முடியும் வரை ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்ப மாட்டார் எனத் தெரிவிக்கின்றன. மேலும் இந்திய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஐசிசி உலகக்கோப்பை 2023 புள்ளி பட்டியலில் (Cricket World Cup 2023 Points Table) முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியின் வெற்றியை பார்க்கும் போது உலகக்கோப்பை 2023 அரையிறுதியில் இந்தியா விளையாடுவது உறுதியாகி இருக்கிறது. உலகக்கோப்பை 2023 (2023 Cricket World Cup) அரையிறுதி போட்டி நடக்கும் போது ஹர்திக் முழு உடற்தகுதியுடன் இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் ஹர்திக் ஃபிட் ஆகியபிறகு, அவருக்குப் பதிலாக யார் வெளியில் அமர வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க - சுப்மான் கில்லுக்கு மீண்டும் ஓய்வு? ஓப்பனிங்கில் அதிரடி வீரர்... அசூர பலம் பெறும் இந்தியா

சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டம்

அக்டோபர் 19 ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா காயமடைந்தார். அதன் பிறகு அவரால் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட முடியவில்லை. இரண்டு போட்டிகளிலும் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைத்தது. நியூசிலாந்துக்கு எதிராக 6-வது இடத்தில் இருந்த சூர்யா 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அதேபோல இங்கிலாந்துக்கு எதிரான கடினமான ஆடுகளத்தில் சூர்யகுமார் யாதவ் 49 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில், இரு அணிகளிலும் அதிக ரன் குவித்த இரண்டாவது வீரராக இருந்தார். இவரை விட ரோஹித் சர்மா (87 ரன்கள்) மட்டுமே அதிக ரன்கள் எடுக்க முடிந்தது.

31வது ஓவரில் ஆடுகளத்திற்கு வந்த சூர்யகுமார் 47வது ஓவர் வரை பேட் செய்து அணியின் ஸ்கோரை 200க்கு மேல் கொண்டு சென்றார். இதே பேட்டிங் பிட்சாக இருந்திருந்தால், அவர் சதம் கூட அடித்திருக்கலாம். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற இவரும் காரணமாக இருந்தார். இத்தகைய சூழ்நிலையில், அவரை இப்போது நீக்குவது அணி நிர்வாகத்திற்கு கடினமான முடிவாக இருக்கும்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய முகமது ஷமி

ஹர்திக் பாண்டியாவை பொறுத்த வரை அவர் ஒரு ஆல்-ரவுண்டர். பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக் கூடியவர். அவரது காயம் காரணமாக் வெளியேறிய பிறகு, இந்திய அணி தனது பிளேயிங்-11 இல் 2 மாற்றங்களைச் செய்தது. முதலில் பேட்டிங்கை அதிகரிக்க சூர்யாவுக்கு என்ட்ரி கொடுக்கப்பட்டது.. இரண்டாவதாக பந்துவீச்சை பலப்படுத்த ஷர்துல் சேர்க்கப்பட்டு, பின்னர் முகமது ஷமி சேர்க்கப்பட்டார்.

முகமது ஷமி தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி நியூசிலாந்துக்கு எதிராக வெறும் 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரச்சின் ரவீந்திரா, வில் யங், டேரில் மிட்செல் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினார். அவர் டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்துவீசி கடைசி 3 பேட்ஸ்மேன்களில் 2 நியூசிலாந்து வீரரை வெளியேற்றினார்.

மேலும் படிக்க - உலகக் கோப்பையில் சீன்கள் மாறுது... அரையிறுதியில் காலடி வைக்கப்போவது யார் யார்?

முகமது ஷமி இத்துடன் நிற்கவில்லை, இங்கிலாந்துக்கு எதிரான குறைந்த ஸ்கோரின் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசினார். அவர் முதல் மாற்றுப் பந்துவீச்சாளராக வந்து தனது இரண்டாவது ஓவரில் பென் ஸ்டோக்ஸை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவையும் வீழ்த்தி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த போட்டியில் முகமது ஷமி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மறுபுறம் ஜஸ்பிரித் பும்ராவுக்கு சிறப்பாக பந்து வீசினார். இருவரின் பந்து வீச்சால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இவ்வளவு வலுவான செயல்பாட்டுக்கு பிறகும், முகமது ஷமியை வெளியே உட்கார வைத்தால் அது நியாயமற்றதாகவே கருதப்படும். ஷர்துல் அல்லது அஷ்வின் போல் கவனமாக பேட் செய்ய முடியாது என்பது அவருக்கு இருக்கும் ஒரே ஒரு பலவீனம். மற்றப்படி பந்து வீசுவதில் பெரிய வெற்றிகளைப் பெறுகிறார். உலக கோப்பை 2023 தொடரில் முகமது ஷமி 2 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா?

ஷ்ரேயாஸ் ஐயர் காயமடைந்ததால் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை உலகக் கோப்பையில் விளையாடுவது கடினமாக இருந்தது. ஆனால் அவர் சரியான நேரத்தில் குணமடைந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சதம் அடித்தார். உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அவரால் தனது கணக்கைத் திறக்க முடியவில்லை, ஆனால் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக 25 மற்றும் 53 ரன்கள் எடுத்த முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடினார். இரண்டு முறையும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதன்பின், வங்கதேசத்துக்கு எதிராக 19 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 33 ரன்களும் மட்டுமே எடுக்க முடிந்தது. இரண்டு முறையும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஷ்ரேயாஸும் நல்ல தொடக்கம் கொடுத்தார், ஆனால் அவரால் பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை. அதேபோல இங்கிலாந்துக்கு எதிராகவும் அவர் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி அழுத்தத்திற்கு ஆளானது.

கடந்த 3 போட்டிகளில் அவரது செயல்பாட்டின் அடிப்படையில், ஸ்ரேயாஸை வெளியேற்றுவது நிர்வாகத்திற்கு எளிதானது. ஆனால் இங்குள்ள பிரச்சனை என்னவென்றால், ஸ்ரேயாஸ் 4வது இடத்தில் பேட் செய்வதும், ஹர்திக் 6வது இடத்தில் பேட் செய்வதும் தான். ஸ்ரேயாஸ் வெளியேறினால், சூர்யா அல்லது ஹர்திக் சற்று முன்னேறி பேட் செய்ய வேண்டும். இது அணிக்கு மிகவும் ஆபத்தான முடிவாக இருக்கும். நம்பர்-4 இடத்துக்கான பேட்ஸ்மேனுக்காக இந்திய அணி நிர்வாகம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. தற்போது அந்த இடத்திற்கு ஸ்ரேயாஸ் தான் சிறந்தவர். இதுபோன்ற சூழ்நிலையில், அவரை தக்க வைப்பது பற்றி அணி யோசிக்கும் என்று தோன்றுகிறது.

மேலும் படிக்க - இந்தியாவில் தேவையில்லாத ஆணி இவர்தான்... உலகக் கோப்பையிலும் தொடரும் வீக்னஸ் - என்ன செய்யலாம்?

ஹர்திக் வந்தால் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரை நீக்க வேண்டும்

அதேநேரத்தில் ஹர்திக் அணியில் இருந்தால், அவர் பேட்டிங் மற்றும் பந்து வீசுவார். இதன் காரணமாக எண்-8 இல் பேட்டிங் செய்யலாம். ஹர்திக்கும் விளையாடினால் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை மாற்ற வேண்டும். ஹர்திக் இல்லாமல் அஸ்வின் விளையாட முடியாது. ஏனெனில் அவ்வாறு செய்ய, இந்தியா ஜடேஜா அல்லது குல்தீப் வெளியே உட்கார வைக்க வேண்டும். குல்தீப் இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர். அதனால் அவரை வெளியேற்ற முடியாது. ஜடேஜாவையும் கைவிட முடியாது. ஏனெனில் இது இந்தியாவின் டெயில் பேட்ஸ்மேன்களின் பட்டியலை நீண்டதாக மாற்றும். இதுபோன்ற சூழ்நிலையில், மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் ஒன்றாக விளையாடினால், ஷமி, சிராஜ் அல்லது பும்ராவில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரை இந்தியா நீக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே செல்வது ஆபத்தானது. எனவே இந்த மாற்றமும் சாத்தியமில்லை.

ஹர்திக்கின் வருகை முகமது சிராஜ்க்கு ஆபத்து ஏற்படலாம்

கேப்டன் ரோஹித் சர்மா கண்டிப்பாக குறைந்தது 3 வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் வைத்திருப்பார். ஒருநாள் போட்டிகளில் அவ்வளவு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டும். தற்போது பும்ரா அணியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர், ஷமி 2 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், ஹர்திக் திரும்பிய பிறகு எந்த வேகப்பந்து வீச்சாளரும் வெளியேற வேண்டும் என்றால், அது முகமது சிராஜ் ஆக தான் இருக்கும். அவர் உலகக் கோப்பை ஃபார்ம் காரணமாக வெளியேறலாம். சிராஜ் இந்த உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார் மற்றும் 5.85 என்ற எகானமியில் ரன்கள் கொடுத்தார்.

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்றலாமா?

ஒரு சிலரோ சூர்யகுமார் யாதவ் ஃபினிஷர் என்பதால் அவரை 6ஆவது இடத்தில் போட்டு, ஹர்திக் பாண்டியாவை 4ஆவது இடத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அப்படிச் செய்தால் கேஎல் ராகுல் (KL Rahul) அவரின் இயல்பான ஓடிஐ (ODI) ஆட்டத்தை விளையாடுவார் என கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா சுழலையும் அடிக்கக் கூடியவர் என்பதால் நம்பர் 4 அவருக்கு பலனளிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா எப்பொழுது அணிக்கு திரும்புவார்?

அக்டோபர் 19ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீசும்போது ஹர்திக் பாண்டியா காயமடைந்தார். பந்தை தடுக்க முயன்றபோது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான அணியின் அடுத்த 2 போட்டிகளில் அவரால் விளையாட முடியவில்லை. அவரது காயம் குறித்து பிசிசிஐ அறிவிப்புகளை வெளியிடவில்லை. ஆனால் செய்தி அறிக்கைகளின்படி, அவருக்கு தசைநார் காயம் உள்ளது. குணமடைய இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் நேரடியாக அரையிறுதிக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில் ஹர்திக் 80 முதல் 90% வரை உடல்தகுதியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. லீக் போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து ஓய்வு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க - தில் தில் பாகிஸ்தான்... பிரகாசமாகும் அரையிறுதி வாய்ப்பு - வங்கதேசம் ஆல்-அவுட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News