2_வது ஒருநாள் போட்டி : இந்திய அணி வெற்றி!! 2-0 கணக்கில் முன்னிலை!!

Last Updated : Sep 22, 2017, 09:00 AM IST
2_வது ஒருநாள் போட்டி : இந்திய அணி வெற்றி!! 2-0 கணக்கில் முன்னிலை!!  title=

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் 2_வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்கவீரர்களாக ரோகித் சர்மா, ரஹானே களம் இறங்கினார்கள். ரோஹித் ஷர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர் நைல் பந்தில், அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 19 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது இந்திய அணி.

பிறகு களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி, ரஹானே இணைந்து அதிரடியான ஆட்டத்தினை வெளிபடுத்தி அணியின் ஸ்கோரை உயர்ந்தினர். இருவரும் அரைசதத்தை பூர்த்தி செய்தனர். ரஹானே 55(பந்து 64; பவுண்டரி 7) ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். மனிஷ் பாண்டே 3 ரன்களும், கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடி 24 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.

பின்னர் கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னால் கேப்டன் தோனி இணைந்தனர். ஆனால் இந்திய கேப்டன் விராட் கோலி 92 (பந்து 107, பவுண்டரி 8) ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் தோனியும் 5 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனர்.

ஹர்திக் பாண்ட்யா மற்றும் புவனேஷ்வர் குமார் இருவரும் நிதானமாக விளையாடினார்கள். புவனேஷ்வர் குமார் 20(33) ரன்களும், குல்தீப் யாதவ் 0(2) ரன்னிலும் அவுட் ஆனார்கள். ஹர்திக் பாண்ட்யா நிதானமாக விளையாடி 20( பந்து26, பவுண்டரி 2) ரன்கள் எடுத்து அவுட் ஆனர்.

யுஸ்வேந்திர சாஹல் 1 ரன் எடுத்து ரன்-அவுட் ஆனர். ஜஸ்பிரித் பும்ரா 10 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் உள்ளார். இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 252 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் கவுல்டர் நைல் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டும், ஆஷ்டன் அகர் மற்றும் பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

வெற்றி பெற 253 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. ஹில்டன் கார்ட்ரைட் மற்றும் டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹில்டன் கார்ட்ரைட்1(15), டேவிட் வார்னர்1(9) இருவரும் புவனேஷ்வர் பந்தத்தில் அவுட் ஆனார்கள். ஆஸ்திரேலியா அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. 

ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிரெவிஸ் ஹெட் இணைந்து நிதானமாக ஆடினர். டிரெவிஸ் ஹெட் 39(39) ரன்னில் அவுட் ஆனார். பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் நிதானமாக ஆடி தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 76 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். 

ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டை இழந்து ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், புவனேஷ்வர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Trending News