CSK அணி வெற்றி பெற 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது MI...!

IPL 2019 தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணிக்கு எதிராக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் குவித்துள்ளது!

Last Updated : May 12, 2019, 09:21 PM IST
CSK அணி வெற்றி பெற 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது MI...! title=

IPL 2019 தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணிக்கு எதிராக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் குவித்துள்ளது!

IPL 2019 தொடரின் இறுதி போட்டி இன்று ஐதராபாத் ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரராக களமிறங்கிய குவிண்டன் டீ காக் 29(17) மற்றும் ரோகித் ஷர்மா 15(14) ரன்களில் வெளியேற இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் இரட்டை இலக்க ரன்களில் வெளியேறினர். 

அணியில் அதிகபட்சமாக பொல்லார்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 41(25) ரன்கள் குவித்தார். இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது.

சென்னை அணியின் தீபக் சஹர் 3 விக்கெட், சர்துல் தாக்கூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

இதனைத்தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கவுள்ளது.

Trending News