சதமடித்து சாதனை செய்தார் MS Dhoni: IPL-ல் தல தோனிக்கு புதிய ரெகார்ட்

தோனி இந்திய கிரிக்கெட் விளையாட்டில் ஒரு அசைக்க முடியாத ஆளுமையாக உள்ளவர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 1, 2021, 10:37 AM IST
  • சிலருக்கு வயது என்பது ஒரு எண்ணிக்கைதான்.
  • 40 வயதிலும் தோனியின் திறமை உச்சத்தில் உள்ளது.
  • தோனி இந்திய கிரிக்கெட் விளையாட்டில் ஒரு அசைக்க முடியாத ஆளுமையாக உள்ளவர்.
சதமடித்து சாதனை செய்தார் MS Dhoni: IPL-ல் தல தோனிக்கு புதிய ரெகார்ட் title=

சிலருக்கு வயது என்பது ஒரு எண்ணிக்கைதான். எம்.எஸ் தோனியும் அப்படிப்பட்டவர்தான். 40 வயதிலும் அவரது திறமை உச்சத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் எம்.எஸ் தோனி மற்றொரு சதத்தை நிறைவு செய்தார். IPL போட்டிகளின் வரலாற்றில், ஒரே உரிமையாளரது அணியில் விளையாடி, 100 கேட்ச்களை பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். வியாழக்கிழமை நடந்த ஐபிஎல் 2021 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) க்கு எதிராக மேலும் மூன்று கேட்ச்களைப் பிடித்து தோனி இந்த சாதனையை நிகழ்த்தினார்.

தோனி இந்திய கிரிக்கெட் விளையாட்டில் ஒரு அசைக்க முடியாத ஆளுமையாக உள்ளவர். கடந்த சில பருவங்களில் அவரது பேட்டிங்கில் சிறிய சரிவு காணப்பட்டாலும், அவரது விக்கெட் கீப்பிங் திறன்களை யாராலும் குறைத்துக் கூற முடியாது. SRH விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவின் விக்கெட்டை எடுப்பதில் தோனியின் பங்களிப்பின் மூலம் அவர் IPL இல் CSK அணிக்காக 100 கேட்ச்களை நிறைவு செய்தார்.

ALSO READ: IPL 2021: SRH vs CSK போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

வியாழக்கிழமை, தோனி (MS Dhoni), ஜேசன் ரோயா, சாஹா மற்றும் ப்ரியம் கார்க் ஆகியோரின் கேட்ச்களை பிடித்து CSK அணிக்காக 101 கேட்ச்களை பிடித்த பெருமையைப் பெற்றார். இந்த சாதனையைப் பொறுத்தவரை அவருக்கு பின்னால், சுரேஷ் ரெய்னா (சிஎஸ்கேவுக்கு 98 கேட்சுகள்) மற்றும் கீரான் பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 94 கேட்சுகள் ) உள்ளனர்.

விக்கெட் கீப்பரால் அவுட் செய்யப்பட்ட பேட்டர்களின் கணக்கிலும் தோனியே முதல் இடத்தில் உள்ளார். ​​215 போட்டிகளில் அவர் 158 முறை பேட்டர்களை அவுட் செய்துள்ளார். தோனியின் பெயரில் மொத்தம் 119 கேட்சுகள் மற்றும் 39 ஸ்டம்பிங்குகள் உள்ளன.

இந்த சீசனில் (IPL 2021) தோனிக்கு தனது திறமைகளை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவருக்கு வாய்ப்பு கிடைத்த சமயங்களில், தோனி பெரும்பாலும் ஏமாற்றத்தையே அளித்துள்ளார். இருப்பினும், வியாழக்கிழமை, ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 11 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியின் உதவியுடன் 14 ரன்கள் எடுத்தார்.

நேற்றைய வெற்றிக்குப் பிறகு, சிஎஸ்கே இந்த சீசனில் பிளேஆஃபிற்கு தகுதி பெற்ற முதல் அணியாகியுள்ளது.

ALSO READ: பானி பூரி விற்பனையாளராக இருந்து சூப்பர் கிரிக்கெட்டராக உயர்ந்த RR பேட்டர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News