இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷாப் பந்த் விலகல்...

இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார், இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி ராஜ்கோட்டில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

Last Updated : Jan 16, 2020, 10:26 AM IST
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷாப் பந்த் விலகல்... title=

இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார், இப்போட்டி ஜனவரி 17-ஆம் தேதி ராஜ்கோட்டில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின் இரண்டாம் பாகத்தில் ஒரு தருணத்தில் பந்தடி அதிர்ச்சி அடைந்த ரிசாப் பந்த் பின்னர் போட்டியில் இருந்து ஒதுங்கினார். மேலும் ஒரு சிறப்பு மருத்துவரால் கண்காணிக்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டாலும், இடது கை வீரர் ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். மேலும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) மறுவாழ்வு நெறிமுறைக்கு உட்படுத்தும் நோக்கில் அவர் எதிர்வரும் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

"முதலாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்யும் போது அவரது ஹெல்மெட் மீது மோதிய பின்னர், ரிஷாப் ஒரு மூளையதிர்ச்சி பெற்றார், மேலும் விளையாட்டில் பங்கேற்காமல் விடை பெற்றார். மேலும் சிறப்பு மருத்துவரால் கண்காணிக்கப்பட்ட பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டார். எனினும் அவரது மறுவாழ்வு நெறிமுறைக்கு உட்படுத்த அவர் பெங்களூரு NCA-க்கு செல்வார்" என்று BCCI ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"அவர் 2-வது ஒருநாள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறார். இறுதி ஒருநாள் போட்டிக்கான அவர் கிடைப்பது புனர்வாழ்வு நெறிமுறையின் போது அவர் எவ்வாறு பதிலளிப்பார் என்பதன் அடிப்படையில் இருக்கும்" என்று BCCI மேலும் கூறியுள்ளது.

செவ்வாயன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் 44-வது ஓவரில் 22 வயதான ஸ்டம்பர் ஒரு பாட் கம்மின்ஸ் பவுன்சரால் ஹெல்மெட் மீது தாக்கப்பட்டார், இதைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் இந்தியா களத்தில் இறங்கியபோது கீப்பிங் செய்ய வேண்டியிருந்தது.

இப்போட்டியில் இந்தியா போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News