2022 டி20 உலகக் கோப்பைக்கான ரிசர்வ் டே விதி பற்றி தெரியுமா?

2022 டி20 உலகக் கோப்பையில் 'ரிசர்வ் டே' என்ற விதிமுறையை ஐசிசி சேர்த்துள்ளது, அவை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் மட்டுமே அமலுக்கு வரும்.   

Written by - RK Spark | Last Updated : Oct 16, 2022, 02:03 PM IST
  • டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16 அன்று தொடங்குகிறது.
  • இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
  • இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும்.
2022 டி20 உலகக் கோப்பைக்கான ரிசர்வ் டே விதி பற்றி தெரியுமா?  title=

2022 டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16 அன்று தொடங்குகிறது, சூப்பர் 12 சுற்று தொடங்கும் முன் தகுதிச் சுற்றுகள் முதலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முழு போட்டியின் அட்டவணை, இடங்கள் மற்றும் நேரங்களும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) போட்டியில் 'ரிசர்வ் டே' இருப்பதற்கான வாய்ப்பையும் சேர்த்துள்ளது, ஆனால் இந்த அம்சம் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறாத பட்சத்தில், ரிசர்வ் நாட்கள் அமலுக்கு வரும்.

முக்கியமான நிகழ்வுகளில் ஐசிசி ரிசர்வ் டேவை வைப்பது இது முதல் முறை அல்ல. குறிப்பிடத்தக்க வகையில், 2019 ஒருநாள் உலகக் கோப்பையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான அரையிறுதியில் மான்செஸ்டரில் தொடர்ந்து மழை பெய்ததால், போட்டியை ரிசர்வ் நாளுக்குத் தள்ள வேண்டியிருந்தது.  இருப்பினும், மேகமூட்டமான சூழ்நிலையில் நியூசிலாந்து பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியதால், அத்தகைய சூழ்நிலை இந்தியாவிற்கு உதவவில்லை. அதுவரை உலகக் கோப்பையில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை, ஆனால் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் இந்திய டாப் ஆர்டரை விரைவாக வெளியேற்றினர்.

மேலும் படிக்க | ரோகித்தின் ஹிட் லிஸ்டில் இளம் வேகப்பந்து வீச்சாளர்; இந்திய அணி வாய்ப்பு இனி கஷ்டம்

ரிசர்வ் தினம் எப்போது நடைமுறைக்கு வருகிறது?

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியின் திட்டமிடப்பட்ட தேதியில் ஒரு அணிக்கு குறைந்தது 5 ஓவர்கள் கூட பந்து வீச சாத்தியமில்லை என்றால் மட்டுமே ரிசர்வ் நாள் கொண்டுவரப்படும்.  இரண்டு அணிகளும் 5 ஓவர் கூட போட முடியாத சூழ்நிலையில் ரிசர்வ் நாள் அறிவிக்கப்படும். மழை குறுக்கீடுகள் அல்லது வேறு இயற்கை சூழ்நிலைகள் காரணமாக இத்தகைய நிலைமை ஏற்படலாம்.  2022 டி20 உலகக் கோப்பையின் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் முறையே நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும்.

மேலும் படிக்க | பிசிசிஐ-ல் இருந்து வெளியேறிய பிறகு சவுரவ் கங்குலி எடுத்த முக்கிய முடிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News