IRCTC Update: பயணிகள் கவனத்திற்கு! இந்திய ரயில்வேயில் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள்!

நவம்பர் 1 முதல் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நாட்கள் 120க்கு பதிலாக 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு மற்றும் ரத்து செய்வதற்கான புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Nov 2, 2024, 03:31 PM IST
    முன் பதிவு தொடர்பாக ரயில்வேயின் புதிய விதி.
    120 நாட்கள் இருந்து 60 ஆக குறைப்பு.
    டிக்கெட்டை ரத்து செய்யும் வசதி கிடைக்கும்.
IRCTC Update: பயணிகள் கவனத்திற்கு! இந்திய ரயில்வேயில் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள்!
நவம்பர் 1 முதல், ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தொடர்பான புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ​​இனி 120 நாட்களுக்குப் பதிலாக 60 நாட்களுக்கு முன்பு மட்டுமே டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பு மட்டுமே உங்கள் பயணத்தைத் திட்டமிடலாம். நீங்கள் ஏற்கனவே 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பு பதிவு செய்து இருந்தால், அவை செல்லுபடியாகும். நீங்கள் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, தேவைப்பட்டால் அவற்றை ரத்து செய்யலாம். தாஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் கோமதி எக்ஸ்பிரஸ் போன்ற சில ரயில்கள் இன்னும் வழக்கமான குறுகிய முன்பதிவு நேரத்தைக் கொண்டுள்ளன, மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 365 நாட்கள் வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்ற விதியும் மாறவில்லை.

மேலும் படிக்க | தீபாவளிக்கு அடுத்த நாளே ஆப்பு... எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு - மக்கள் அதிர்ச்சி

Add Zee News as a Preferred Source

மக்கள் ஏற்கனவே வாங்கிய டிக்கெட்டுகளுக்கு புதிய விதிகள் பொருந்தாது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. IRCTC இணையதளம், IRCTC ஆப் அல்லது ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பலர் தங்களது டிக்கெட்டை கடைசி நிமிடத்தில் ரத்து செய்துவிட்டு காலி இருக்கைகளை விட்டு செல்வதால் இந்த முடிவை ரயில்வே எடுத்துள்ளனர். ஒவ்வொரு 100 டிக்கெட்டுகளில் 21 ரத்து செய்யப்படுவதால், டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான 120 நாள் கால அவகாசம் அதிகம் என்றும், ஒவ்வொரு 100 பேரில் 4 முதல் 5 பேர் பயணம் செய்வதில்லை என்றும் ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது. சிலர் தங்களது டிக்கெட்களை ரத்து செய்வதில்லை என்றும், இதனால் சிலருக்கு டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் பெரும்பாலான மக்கள் தங்கள் பயணத்தின் 45 நாட்களுக்கு முன்பு தான் டிக்கெட்டை புக் செய்வதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

புதிய விதியால் யாருக்கு லாபம், யாருக்கு பாதிப்பு?
 
பொங்கல் அல்லது தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை காலத்தில் ரயில்கள் மிகவும் கூட்டமாக இருக்கும். இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகை வரவிருப்பதால், நகரங்களில் உள்ள ஏராளமான மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள். இதனால் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ரயில் அல்லது விமான டிக்கெட்டுகளை மக்கள் புக் செய்வது கடினம், மேலும் சிலர் அதிக பணத்திற்கு டிக்கெட்டுகளை விற்க முயற்சி செய்கிறார்கள். இதனால், ரயில்வேக்கு நஷ்டம் ஏற்படுவதோடு, அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த புதிய விதிகள் மக்கள் அதிக பணத்திற்கு டிக்கெட்டுகளை விற்பதை தடுக்கவும், அனைவருக்கும் எளிதான டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும் உதவும். மேலும் பண்டிகை காலத்தில் கூடுதல் ரயில்களை இயக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.
 
ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்களுக்கு என்ன நடக்கும்?
 
நீங்கள் ஏற்கனவே 90 நாட்களுக்கு முன்பு ரயில் டிக்கெட் வாங்கியிருந்தால், புதிய விதியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. புதிய விதி நவம்பர் 1, 2024 அன்று தொடங்குகிறது. அக்டோபர் 31க்கு முன் நீங்கள் டிக்கெட் வாங்கியிருந்தால், அனைத்தும் அப்படியே இருக்கும், மேலும் உங்கள் டிக்கெட் பாதுகாப்பாகவும் இருக்கும். மேலும், நீங்கள் டிக்கெட்டை 60 நாட்களுக்கு முன்னதாக வாங்கியிருந்தால், அதை மாற்றுவது அல்லது ரத்து செய்வது குறித்த விதிகள் அப்படியே இருக்கும். கோமதி எக்ஸ்பிரஸ் மற்றும் தாஜ் எக்ஸ்பிரஸ் போன்ற சில ரயில்களில், ரயில் புறப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மட்டுமே மக்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் விதி ஏற்கனவே உள்ளது. மேலும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் முன்பு போலவே 365 நாட்களுக்கு முன்பே தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழுவில் 92% ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட் 2025 -இல் நல்ல செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News