இந்திய அணிக்கு விரைவில் திரும்பும் சிஎஸ்கே வீரர் - அமித் மிஸ்ராவின் அப்டேட்

காயத்தால் சிகிச்சை பெற்று வரும் இந்திய வீரர், தற்போது முழு உடல் தகுதியுடன் இந்திய அணிக்கு திரும்ப தயாராக இருக்கிறார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 30, 2022, 03:35 PM IST
  • உடல் தகுதியை எட்டிய தீபக் சாஹர்
  • அமித் மிஸ்ராவுடன் இருக்கும் புகைப்படம்
  • விரைவில் இந்திய அணிக்கு திரும்ப திட்டம்
இந்திய அணிக்கு விரைவில் திரும்பும் சிஎஸ்கே வீரர் - அமித் மிஸ்ராவின் அப்டேட் title=

கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர், இப்போது காயத்தில் இருந்து மீண்டு முழு உடல் தகுதியை எட்டியிருக்கிறார். 20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணியில் இடம் பிடிக்கும் கனவிலும் இருக்கிறார். இந்த தகவலை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான அமித் மிஸ்ரா டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | டி20 போட்டி நடைபெற்ற மைதானத்தில் திடீர் குண்டு வெடிப்பு! மக்கள் அதிர்ச்சி!

சிஎஸ்கே வீரரின் பிளான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் காயம் காரணமாக நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடாத அவர், காயம் இருந்து மீள்வதற்காக தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்னர், தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற தீபக் சாஹர், முழு உடல் தகுதியை எட்டுவதற்காக முறையான பயிற்சியில் ஈடுபட்டார். தொடர்ச்சியான பயிற்சிகள் மூலம் முழு உடல்தகுதியையும் அவர் எட்டியிருக்கிறார். அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் அமித் மிஸ்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய அணிக்கு நல்ல செய்தி. தீபக் சாஹர் உடல் தகுதியுடன் இருக்கிறார். இந்திய அணிக்காக அவர் விரைவில் களம் காண தயாராக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார். 

தீபக் சாஹருக்கு காயம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரின் போது தீபக் சாஹர் காயம் அடைந்தார். தொடையில் ஏற்பட்ட காயத்தால் நீண்ட ஓய்வெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஐபிஎல் போட்டிக்கு திரும்பிவிடுவார் என்ற நம்பிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சுமார் 14 கோடி ரூபாய்க்கு அவரை ஏலம் எடுத்தது. இருப்பினும் தீபக் சாஹரின் காயம் குணமாகாததால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அதற்கு அடுத்து இந்திய அணி பங்கேற்ற தொடர்களிலும் அவர் பங்கேற்கவில்லை. 

தீபக் சாஹர் திருமணம்

காயம் அடைந்து ஓய்வில் இருக்கும்போதே நீண்ட நாள் காதலியான ஜெயா பரத்வாஜை திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் ஜூன் 3 ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய அணியின் வீரர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இப்போது உடல் தகுதியை எட்டியிருக்கும் அவர், விரைவில் இந்திய அணியின் 20 ஓவர் அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News