நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊர் சென்றடைந்தது: பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து அவரின் உடல் தேனி மாவட்டம் பசுமலைத்தேரியில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு மாரிமுத்துவின் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 9, 2023, 07:37 AM IST
  • நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு
  • திரையுலகம், சினிமா பிரபலங்கள் இரங்கல்
  • உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது
நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊர் சென்றடைந்தது: பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி title=

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் நடித்து மக்களின் ஏகோபித்த அன்பை பெற்ற நடிகர் மாரிமுத்து நேற்று அந்த தொடருக்கான டப்பிங் செய்து கொண்டிருந்தபோது அசௌகரித்தை உணர்ந்துள்ளார். உடனடியாக தானே காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனை சென்ற அவர், அங்கு நிலைகுலைந்துள்ளார். மருத்துவர்கள் உரிய சிகிச்சைக்கு முயற்சி செய்தும் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்துவிட்டது. இந்த செய்தி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. மாரிமுத்துவின் காலமான செய்தி திரையுலகில் தீயாக பரவியது. உடனடியாக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு புறப்பட்ட நடிகர் நடிகைகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க | விவேக் to மாரிமுத்து..மாரடைப்பு காரணமாக உயிரிழந்த கோலிவுட் பிரபலங்கள்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர். பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் நடிகர் மாரிமுத்துவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் மெதுவாக உதவி இயக்குநராக முன்னேறி, இயக்குநராக 2 படங்களை இயக்கி, தற்போது நடிப்பில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வந்தார் மாரிமுத்து. அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் படத்திலும் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார்.

அவரின் ஏம்பா ஏய்.. வசனம் செம டிரெண்டிங்கில் இருந்தது. பல்வேறு கடினமான அசாதாரண சூழல்களையெல்லாம் கடந்து திரைத்துரையில் ஒளிரும் நட்சத்திரமாக பிரகாசிக்க தொடங்கிக் கொண்டிருந்தார். அவருக்கான வாய்ப்புகளும் இப்போது அதிகமாக வந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தது தமிழ் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரின் கடவுள் மறுப்பு கொள்கை உள்ளிட்ட பேச்சுகளும் அண்மைக்கலாமக வேகமாக பரவி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில், சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சொந்த ஊரான பசுமலைத்தேரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் உடலுக்கு உறவினர்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன்பின்னர் அங்கிருக்கும் மயானத்தில் மாரிமுத்துவின் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது. 

மேலும் படிக்க | “ஜோசியர்களை மோசமா பேசினா இப்படி தான் மாரிமுத்து”.. ச்சீ இவ்வளவு கேவலமா பேசாதீங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News