தென்காசியில் பரபரப்பு - அதிமுக பிரமுகரின் தந்தை கொடூர கொலை

தென்காசி மாவட்டம் குற்றலாம் அருகே அதிமுக பிரமுகரின் தந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : May 4, 2022, 02:30 PM IST
  • அதிகாலையில் அரங்கேறிய பயங்கரம்
  • அதிமுக பிரமுகர் தந்தை அடித்து கொலை
  • வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை
 தென்காசியில் பரபரப்பு - அதிமுக பிரமுகரின் தந்தை கொடூர கொலை title=

தென்காசி அருகே உள்ள இலஞ்சி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர் மைதீன்பாத். இவர் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ஆவார். மேலும் இவர் அதிமுக மகளிரணி  அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவரது தந்தை கோட்டை மாடன். இன்று காலை கோட்டை மாடன் வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள அவரது தோட்டத்திற்குச் சென்று உள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அப்போது, தோட்டத்தின் வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். 

crime, thenkasi murder,kutralam murder

கோட்டைமாடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது கோட்டைமாடன் குடும்பத்தினர் உடைந்து போனார்கள். உடனடியாக இதுபற்றி குற்றாலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தென்காசி டிஎஸ்பி மணிமாறன் மற்றும் குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தாமஸ்  மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.இறந்தவரின் உடலை சோதனை செய்ததில் அவரின் உடலில் ரத்தக்காயம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரது  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

crime, thenkasi murder,kutralam murder

முதற்கட்ட விசாரணையில் வீட்டிலிருந்து வெளியே வந்த கோட்டைமாடனை யாரோ மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்று அவரது தோட்டத்தில் அவர் தனிமையில் இருக்கும்போது அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி இருப்பதாகத் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட கோட்டை மாடன் பெயரிலேயே அனைத்து சொத்துக்கள் இருப்பதாகவும் சொத்துப் பிரச்சனை காரணமாக கூட இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க  | சமஸ்கிருத உறுதிமொழி : மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம்

சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். குற்றாலம் அருகே அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | இடியப்பம் தராததால் பொய் வழக்கு : போலீஸ் அட்டகாசம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News