"அம்பேத்கர் விருது": தமிழக அரசின் அழைப்பு!

Last Updated : Oct 24, 2017, 07:01 PM IST
"அம்பேத்கர் விருது": தமிழக அரசின் அழைப்பு! title=

தமிழகத்தில் ஆண்டுதோறும் வழங்கப்படும் அண்ணல் அம்பேத்கர் விருதினை பெற விரும்புவோர், அவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

"தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
 
அவ்வகையில் 2018-ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

www.tn.gov.in/ta/forms/Deptname/1  என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகத்தில் அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் அரும் பெரும் பணியாற்றியதற்கான நற்சாட்சி ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது."

என தெரிவித்துள்ளது!

Trending News