ஓடும் ரயிலில் கழன்ற இரண்டு பெட்டிகள் - விசாரணைக்கு உத்தரவு

சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு பெட்டிகள் கழன்றது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 6, 2022, 04:51 PM IST
  • சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இரண்டு பெட்டிகள் கழன்றன
  • ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போதே கழன்றன
  • இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
ஓடும் ரயிலில் கழன்ற இரண்டு பெட்டிகள் - விசாரணைக்கு உத்தரவு title=

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு நேற்று இரவு 10 மணியளவில் சேரன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. என்ஜினுடன் சேர்த்து மொத்தம் 23 பெட்டிகள் அதில் இருந்தன. இரவு 11 மணியளவில் ரயிலானது திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4ஆவது நடைமேடை வழியாக சென்றது. அப்போது ரயிலின் S7 மற்றும் S8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி திடீரென பலத்த சத்தத்துடன் உடைந்தது. இதில் S8 பெட்டியுடன் இணைந்து இருந்த 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடின. ரயில் என்ஜினுடன் சேர்ந்த 7 பெட்டிகள் தனியாக சென்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். ரயிலில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதை உணர்ந்த என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக  ரயிலை நிறுத்தினார். 

இதற்கிடையே தனியாக கழன்று ஓடிய 16 பெட்டிகளும் திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4ஆவது நடைமேடையில் மெதுவாக வந்து நின்றன. இதனையடுத்து ரயிலில் இருந்த பயணிகள் பதறி கீழே இறங்கினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்ததில் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ரயில் பெட்டி தனியாக கழன்று ஓடியது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரம்பூர் லோகோ பணிமனையில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திருவள்ளூருக்கு விரைந்தனர். 

மேலும் படிக்க | இன்று மாலை ஆர்.எஸ்.எஸ் பேரணி - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் ரயில் பெட்டிகள் அனைத்தும் இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இரவு ஒரு மணியளவில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூரில் இருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது.ரயில் பெட்டிகளின் இணைப்பு கொக்கி துண்டானது ஏன்? ஊழியர்கள் சரி பார்த்தனரா? என்று உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள். இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசாரும் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தென்னக ரெயில்வேவும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க | மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே! போஸ்டரால் பரபரப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News