மதுரை ரயில் தீ விபத்தில் சதித்திட்டமா? தப்பியோடிய 2 பேர் கைது

மதுரை ரயில் தீ விபத்தின்போது தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள் கைது செய்யபட்டிருக்கும் நிலையில், அவர்களிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் விசாரணை நடத்தினார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 27, 2023, 02:46 PM IST
  • மதுரை ரயில் தீ விபத்து
  • அதிகாரிகள் விசாரணை
  • சதித்திட்டமா? என விளக்கம்
மதுரை ரயில் தீ விபத்தில் சதித்திட்டமா? தப்பியோடிய 2 பேர் கைது title=

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து கடந்த 14 ஆம் தேதி 63 பயணிகளுடன் தென்னந்தியாவில் ஆன்மீக சுற்றுலாவிற்காக புறப்பட்ட ரயில் பெட்டியானது மதுரையில் நேற்று காலை ரயில்வே நிலையம் அருகே போடிலைன் யார்ட் பகுதியில் நின்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி டீ போட முயன்றபோது சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் கருகி 9 பேர்கள் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். மேலும், 8 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்த நிலையில் தீ விபத்து தொடர்பாக இன்று காலை இரண்டாவது நாளாக ரயில்வே காவல்துறை தடவியல் நிபுணர்கள் குழுவினர் நேரில் சென்று ரயில் பெட்டியில் சோதனை நடத்தினர். அப்போது விபத்திற்கு காரணமான கூறப்படும் வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டரின் பாகங்கள், கேஸ் அடுப்பின் பாகங்கள் சமையல் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர். மேலும், விபத்துக்குள்ளாகிய ரயில் பெட்டியில் இருக்கை பகுதிகளிலும், மேற்கூரைகளிலும் சோதனை நடத்தியபோது இருக்கை பகுதியில் பயணி கொண்டு வந்திருந்த பெட்டிகளில் இருந்து கட்டு கட்டாக எரிந்த நிலையில் 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றினர். 

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் வழக்குகள் தள்ளுபடி... உடனே பிரஸ்மீட்டில் பேசிய இபிஎஸ்!

இதனிடையே ரயில்பெட்டி தீ விபத்து தொடர்பாக தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி.எம். சௌத்ரி, மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 7 பயணிகளிடம் இன்று காலை விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து நேற்று ரயில்பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தின்போது  தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்தனர். அந்த 2 சமையல் ஊழியர்களிடம் தனித்தனியாக பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்தினார். முன்னதாக  சிகிச்சையில் இருந்த 7 பயணிகளிடம் பாதுகாப்பு ஆணையர் விசாரணை முடித்த நிலையில் 7 பேரும் விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும், அவர்களோடு சேர்த்து 28 பேர் மதுரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து லக்னோவிற்கு புறப்பட்டு சென்றனர்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்பு ஆணையர் டி.எம்.சௌத்ரி பேசியபோது, மதுரை ரயில் பெட்டி  தீ விபத்து குறித்து உரிய  விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியவர்கள் மீது என்ன மாதிரியான  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிவில் தெரிய வரும். சம்பவம் தொடர்பாக கைது குறித்த கேள்விக்கு அது தொடர்பாக காவல்துறையினர் தான் முடிவு செய்வார்கள். விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்தவர்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டி இருப்பதால் அவர்களிடம் விரைவாக விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளோம். 

சுற்றுலா ரெயில் பெட்டிகள் பயணிகள் ரெயில் பெட்டியில் இனி வரும் காலங்களில் இதுபோல் விபத்து நடைபெறதா வண்ணம்,  உரிய விதிமுறைகளை கடுமையாக வகுக்கப்படும். இந்த விபத்து தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சதி எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது" என்றார்.

மேலும் படிக்க | உண்டியலில் ரூ.100 கோடி செக்! சாமிக்கே அல்வா கொடுத்த பக்தர்-அதிர்ந்து போன அர்ச்சகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News