கோர விபத்து - சபரிமலைக்கு சென்று வந்த ஐயப்ப பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு

ஐயப்பன் கோவில் சென்று வந்த வாகனம் குமுளி மலைச்சாலையில் 50 அடி பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 24, 2022, 11:48 AM IST
  • 3 பேருக்கு படுகாயம்
  • போலீசார் தொடர் விசாரணை
கோர விபத்து - சபரிமலைக்கு சென்று வந்த ஐயப்ப பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு title=

சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கிவிட்டதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான வாகனங்கள் தேனி மாவட்டத்தில் இருந்து கம்பம் வழியாக கம்பம் மெட்டு  மலைச்சாலையில் சபரிமலை செல்கின்றனர். சபரிமலை சென்றவர்கள் குமுளி மலைப்பாதை வழியாக தமிழகத்திற்கு திரும்பி வருகின்றனர்.

அவ்வாறு சபரிமலை சென்று திரும்பிய தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வாகனம் குமுளி மலைச்சாலையில் பாலத்தை கடக்கும்போது, நிலை தடுமாறி சும்மா 50 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தை பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் பார்த்து உடனே காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புபணியில் விரைந்து ஈடுபட்டனர். 

மேலும் படிக்க | இழக்கும் மாண்பை மீட்க ராகுலுடன் கைகோர்ப்போம் - கமல் ஹாசன் அழைப்பு

அப்போது, சுமார் 9 வயது மதிக்கத்தக்க சிறுவனை பலத்த காயத்துடன் முதலாவதாக மீட்கப்பட்டு அவனை கேரளாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் வாகனத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் 7 நபர்கள் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும் பலத்த காயமடைந்த இருவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் உயிரிழந்த ஏழு ஐயப்பன் சுவாமிகளையும், உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த மீட்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து தமிழக, கேரளா பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் - கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News