மதுரையில் உடல்நலக்குறைவால் 'புத்தக தாத்தா' காலமானார் !

பல மாணவர்களின் படிப்பு தாகத்தை தீர்த்து அனைவராலும் அன்போடு 'புத்தக தாத்தா' என்று அழைக்கப்பட்ட முருகேசன்(81) உடல்நலக்குறைவால் காலமான சம்பவம் பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2021, 08:53 PM IST
மதுரையில் உடல்நலக்குறைவால் 'புத்தக தாத்தா' காலமானார் ! title=

மதுரை : பல மாணவர்களின் படிப்பு தாகத்தை தீர்த்து அனைவராலும் அன்போடு 'புத்தக தாத்தா' என்று அழைக்கப்பட்ட முருகேசன்(81) உடல்நலக்குறைவால் காலமான சம்பவம் பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  என்னதான் அடுத்தவர்களின் சொத்துக்களை சுரண்டி பிழைக்கும் பலர் இருந்தாலும், எவ்வித பலனையும்  எதிர்பார்க்காமல் உதவி செய்யம் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அதிலும் கல்விக்கு உதவும் மனிதர்கள் அதிகம் போற்றப்பட கூடியவர்கள். 

ALSO READ மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவர் - மனைவி போலீசில் புகார்

மதுரை மாவட்டம் குமாரம் அருகேயுள்ள தண்டளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.  ஆரம்பத்தில் பல சரக்கு கடையில் வேலை பார்த்த இவர், தனியாக பழைய பேப்பர் கடை ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார்.  அப்போது கடைக்கு வரும் பேப்பர்களை படிக்க ஆரம்பித்த இவர் தொடர்ந்து படிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி பல்வேறு விதமான புத்தகங்களை சேர்க்க ஆரம்பித்தார்.  பின்னர் இவரிடம் வந்து சிலர் தமிழ் புத்தகங்களை வாங்கி செல்ல ஆரம்பித்தனர், அதுவே நாளடைவில் இவரது தொழிலாக மாறிவிட்டது.  இரண்டாம் வகுப்பு கூட தாண்டாத இவர் பலரையும் பல்வேறு உயரிய பட்டங்களை வாங்க உறுதுணையாக இருந்துள்ளார்.  கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக எப்போதும் தனது கைப்பையில் 30 முதல் 40 புத்தகங்களை வைத்து கொண்டே சுற்றுவார்.

madurai

இவரிடம் எந்த தலைப்பில் யார் புத்தகம் கேட்டாலும் அந்த தலைப்பில் புத்தகங்களை சேகரித்து கொண்டு வந்து தருவார்.  அவ்வாறு இவர் கொடுக்கும் புத்தகங்களுக்கு பணம் வாங்கமாட்டாராம், சிலர் அவர்களாக பணம் கொடுத்தால் மட்டுமே அதனை வாங்கி கொள்வாராம்.  மதுரை ஆத்திகுளம் பேருந்து நிலையம் அருகிலுள்ள சந்தில் உள்ள இவரது சிறிய வீட்டை புத்தகங்கள் சூழ அமைத்து பல மாணவர்களின் படிப்பு தாகத்தை தீர்த்து வந்தார்.

maduri

மேலும் இவரை அனைவரும் அன்புடன் 'புத்தக தாத்தா' என்று அழைப்பார்கள்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார்.  இவரது மறைவு அனைவருக்கும் பேரிடியாக விழுந்துள்ளது.

ALSO READ ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பாடம் நடத்திய அறிவியல் ஆசிரியர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News