செத்து செத்து விளையாடும் விளையாட்டு... காதலி பிறந்தநாளுக்கு காதலன் தற்கொலை!

பிறந்தநாள் பரிசு தொடர்பாக காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் காதலியை மிரட்டுவதற்காக தூக்கிடுவது போல நடித்த கல்லூரி மாணவன் உயிர் இழந்த சம்பவம் சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 27, 2022, 04:00 PM IST
  • உயிரிழந்த மாணவனுக்கு வயது 19.
  • காதலியிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
செத்து செத்து விளையாடும் விளையாட்டு... காதலி பிறந்தநாளுக்கு காதலன் தற்கொலை! title=

சென்னை முகப்பேர் மேற்கு முதல் பிளாக் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (47).  இவரது மனைவி செல்வராணி (45). இவர்களுடைய மகன் மோகன்(19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் மோகன் தற்கொலை செய்து கொண்டார். கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த பெற்றோர்கள் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். அதன் பின்னர் நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த மோகனின் வீட்டை சோதனை செய்தபோது, அவரின் செல்போனை போலீசார் கைப்பற்றினர். செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக பெண் ஒருவரிடம் பேசியது தெரியவந்தது.

அவரை தொடர்பு கொண்ட போது மோகன், தான் தூக்கு மாட்டி தற்கொலை செய்து போவதாக சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தது தெரியவந்தது. மேலும் அந்த பெண் சென்னை ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலிவராக பணிபுரிந்து வருவதாகவும் இருவரும் காதலித்து வந்ததும் தெரிய வந்தது.

மோகன் உயிரிழந்த செய்தியை கேட்டதும் அழுதப்படியே காவல்  நிலையம் வந்த அந்த இளம்பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | டி ஷர்ட், பேண்ட்டுடன் மனித எலும்புக்கூடு - கூடுவாஞ்சேரியில் அலறிய மக்கள்

மோகன் அவருடைய பிறந்தநாளை கடற்கரையில் கொண்டாடியுள்ளார். அப்போது, அந்த பெண்ணும் தனது நண்பர்களோடு அன்று எதேர்ச்சையாக கடற்கரைக்கு சென்றுள்ளது. தொடர்ந்து, கடற்கரையில் மோகன் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, அங்கு இருந்த அனைவருக்கும் கேக் கொடுக்கும்போது, அந்த பெண்ணுக்கும் கேக் கொடுத்துள்ளார். 

அப்போது மோகன் மிகவும் சுட்டி தனமாகவும் , அனைவரிடமும் கனிவோடு பேசியது அந்த பெண்ணிற்கு பிடித்துள்ளது. அப்போது இருந்து, மோகனும் அந்த பெண்ணும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

கடந்த ஒன்றரை வருடமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும், அடிக்கடி இருவருக்கும் சிறு சிறு சண்டைகள் ஏற்படும்.  அப்போதெல்லாம், ஒருவருக்கு ஒருவர், மாறி மாறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விளையாட்டாக மிரட்டி கொள்வோம் என அந்த பெண் கூறியுள்ளார். 

அதேபோல் தான், இன்றும் நாளை அந்த பெண்ணின் பிறந்தநாள் என்பதால் தனக்கு என்ன வேண்டும் எனக்கேட்டு பேசி கொண்டு இருக்கும் போதே, அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறுகிறார். ஒருகட்டத்தில், எப்போதும் போல் தான் தற்கொலை செய்து போவதாக மோகன் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

விளையாட்டாக தான் கூறுகிறார் என்று அந்த பெண்ணும் நினைத்துள்ளார். ஆனால், மோகன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்று செய்தியை கேட்டு தனக்கு கடும் அதிர்ச்சி அடைந்து மன வேதனையில் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுவயது காதலர்களின் விளையாட்டு வினையாகி, கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | பெங்களுரில் இருந்து இறக்குமதியாகும் கஞ்சா! விசாரணையில் அம்பலமான உண்மை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News