அரசியலை விட்டு விலகுகிறேன்: வி.கே. சசிகலா அதிரடி

நான் என்றும் பதவிக்கோ படத்திற்கோ ஆசைப்பட்டதில்லை. தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப் பிரார்த்திப்பேன். ஜெயலலிதா உண்மை தொண்டர்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 3, 2021, 09:53 PM IST
அரசியலை விட்டு விலகுகிறேன்: வி.கே. சசிகலா அதிரடி title=

சென்னை: நான் என்றும் பதவிக்கோ படத்திற்கோ ஆசைப்பட்டதில்லை. தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப் பிரார்த்திப்பேன். ஜெயலலிதா உண்மை தொண்டர்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன். எனவே நான் அரசியலை விட்டே ஒதுங்குகிறேன் என சசிகலா (V K Sasikala) அறிவித்துள்ளார். அதுக்குறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடித்து வெளியே வந்தவரும் மற்றும் ஆளும் அதிமுக-வில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டவருமான வி.கே.சசிகலா இன்று (புதன்கிழமை) எழுதிய கடிதத்தில் தான் அரசியலில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். 

வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் சசிகலா நிச்சயம் போட்டியிடுவார் என்று டிடிவி தினகரன் தென்காசியில் செய்தியாளர்களிடம் கூறிய சில நாட்களுக்குப் பிறகு, இப்படி ஒரு அறிக்கை வந்துள்ளது. 

ALSO READ |  சசிகலாவின் பலகோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்: காரணம் சட்டமா? சதியா?

V K Sasikala quit from Indian Politics

V K Sasikala statement about political

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYe

Trending News