காவிரி விவகாரம்: 22-ம் தேதி அரசின் அனைத்துக் கட்சி கூட்டம்!

காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் தலைமையில் வரும் 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Last Updated : Feb 19, 2018, 02:24 PM IST
காவிரி விவகாரம்: 22-ம் தேதி அரசின் அனைத்துக் கட்சி கூட்டம்! title=

முதலமைச்சர் பழனிச்சாமி பதவியேற்றபின் நடைபெற இருக்கின்ற முதல் அனைத்துக்கட்சி கூட்டம் வருகின்ற 22-ம் தேதி நடைபெறுமென்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து வரும் காவிரி விவகாரத்தில் காவிரியில் தமிழகத்தின் பங்கு 14.75 டி.எம்.சி-யாக குறைக்கப்பட்ட நிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் காவிரி விவகாரம் தொடர்பாக வருகின்ற  22-ம் தேதி காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்த ஆலோசனை கூடமானது, முதலவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாடடவும், விவசாயிகளின் நலனை பாதுக்காக்கவும் இந்த கூட்டத்தில் அரசு உறுதியளிக்கும் என்று கருதுகின்றனர். 

Trending News