மெட்ரோ பணியால் வெளியேறிய சிமென்ட் கலவை: பீதியில் பொதுமக்கள்

Last Updated : Jun 9, 2017, 09:59 AM IST
மெட்ரோ பணியால் வெளியேறிய சிமென்ட் கலவை: பீதியில் பொதுமக்கள் title=

சென்னை மெட்ரோ பணியின் காரணமாக, சென்னை ராயபுரம் பகுதியில் சிமென்ட் கலவை சாலையில் வெளியேறியது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னை - ராயபுரத்தில் மேற்கு கல்லறை சாலையில் பூமிக்கடியிலிருந்து சிமென்ட் கலவை பொங்கி வருகிறது. மெட்ரோ பணியால் வீடுகளில் இருந்து வீதிக்கு வந்த நுரையை அகற்றும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

சுமார் 2 அடி உயரத்துக்கு வெளியேறிய இந்த சிமென்ட் கலவை, ரோடு வரைக்கும் வெளியேறியது. திடீரென சிமென்ட் கலவை வெளியேறியதால், அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்தனர். 

ஏற்கெனவே, இதேபோல வண்ணாரப்பேட்டை பகுதியில் சிமென்ட் கலவை வெளியேறியது. இரண்டு முறை சென்னை அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News