கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த சென்னை பெண்!

கவிதா தனது யோக மாரத்தானினை தொடர்ந்து செய்து வருகின்றார், இதன்படி அவர் வரும் டிச.,30 வரையில் தொடர்ந்து யோகா புரிந்து புதிய சாதனையை படைக்க திட்டமிட்டுள்ளார்

Last Updated : Dec 28, 2017, 08:20 PM IST
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த சென்னை பெண்! title=

யோகா மராத்தான் நிகழ்ச்சியில், சென்னையை சேர்ந்த 31 வயது பெண்மனி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்!

3.5 வயது குழந்தைக்கு தாயான கவிதா பரனிதரன், டிச., 23 அன்று காலை 7 மணி முதல் துவங்கி 5 நாட்கள் தொடர்ந்து யோகா புரிந்துள்ளார். இன்று விடியற்காலை 02.02 மணியளவில் முந்தைய சாதனையான 103 மணிநேர யோக மாராத்தான் என்னும் சாதைனையை முறியடித்துள்ளார்.

இந்த முந்தைய சாதனையானது கடந்த ஜீன் 16 முதல் 20 தேதி வரை ப்ரடியானா பாடில் என்பவர் யோகா மாரத்தான் புரிந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

தற்போது, கவிதா தனது யோக மாரத்தானினை தொடர்ந்து செய்து வருகின்றார், இதன்படி அவர் வரும் டிச.,30 வரையில் தொடர்ந்து யோகா புரிந்து புதிய சாதனையை படைக்க திட்டமிட்டுள்ளார் என தெரிகிறது!

Trending News