அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் & புதுவையில் இடியுடன் கூடிய மழை...

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது....! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 3, 2018, 02:08 PM IST
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் & புதுவையில் இடியுடன் கூடிய மழை... title=

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது....! 

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய லேசானாது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியபோது...! 

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடிமேகங்கள் உருவாவதன் காரணமாக லேசான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானியை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் கடந்த 24மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை பொருத்தவரை திருமயம் 3செ.மீ, அரந்தாங்கி 3 செ.மீ, முதுகுலத்தூர் 3 செ.மீ, கூடலூர் பஜார் 2 செ.மீ, கோவில்பட்டி 2 செ.மீ, புதுக்கோட்டை 2 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

மேலும் கனமழைக்கான வாய்ப்புகளோ, மீனவர்களுக்கு எச்சரிக்கையோ ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending News