சென்னை: மகள் மீது ஆசைப்பட்ட காதலனுக்கு உதவிய தாய்..! வீட்டிலேயே நடந்த பிரசவம்..!

10 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்ட தனது 17 வயது மகளுக்கு வீட்டிலேயே பிரசவமும் பார்த்துள்ளார். சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 14, 2022, 11:59 AM IST
  • கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார் புவனேஷ்வரி
  • முத்துக்குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது
  • மகள் மீது ஆசைப்பட்டதால் அதற்கு உதவிய தாய்
சென்னை: மகள் மீது ஆசைப்பட்ட காதலனுக்கு உதவிய தாய்..! வீட்டிலேயே நடந்த பிரசவம்..!  title=

சொந்த மகளையே தனது ஆண் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்ய சென்னையில் தாய் ஒருவர் அனுமதித்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது தான் கொடுமையிலும் கொடுமை. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். 

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் தனது கணவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதனால், புவனேஸ்வரி தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும் ஓட்டேரி முத்துக்குமார் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. முத்துக்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இருந்தபோதும் அவர் புவனேஷ்வரியின் வீட்டிலேயே தங்கி வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமாரின் பார்வை புவனேஷ்வரியின் மகள் மீது விழுந்துள்ளது.

மேலும் படிக்க | இந்தி தெரிந்தால் வேலையா? அப்போ இங்கே பானிபூரி விற்பவர்கள் யார்? அமைச்சர் கருத்து வைரல்

அவரது மகள் மீதான தன் ஆர்வத்தை தாயிடம் சொல்லியுள்ளார். அந்த இடத்தில் வீட்டை விட்டு முத்துக்குமாரை விரட்டி இருக்க வேண்டிய அவர், அதற்கு மாறாக அவரது எண்ணத்துக்கு துணைபோயுள்ளார். 17 வயதே ஆன தனது மகளை வற்புறுத்தி முத்துக்குமாருடன் நெருக்கமான பழக கட்டாயப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனை அறிந்து கொண்ட புவனேஷ்வரி, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் சிக்கிக்கொள்வோம் என மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமலேயே காலம் தாழ்த்தியுள்ளார்.

Child Abuse

மகளுக்கு பிரசவ காலம் வரும் வரை வீட்டிலேயே மறைத்து வைத்து பாதுகாத்து வந்துள்ளார். அதன்பிறகு மனசாட்சியே இல்லாமல், 10 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்ட தனது 17 வயது மகளுக்கு வீட்டிலேயே பிரசவமும் பார்த்துள்ளார். சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டு நாட்கள் ஆனதும் ஆண் குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு குழந்தையை புவனேஸ்வரியும், முத்துகுமாரும் கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த செவிலியர்கள், `குழந்தை எங்கு பிறந்தது, குழந்தையின் பெற்றோர் யார்' என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள், `குழந்தையின் தாய்க்கு 19 வயதாகிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நாங்கள் அழைத்து வந்தோம்' என்று கூறி மழுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க | திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை! அடையாறு ஆற்றில் தலைப் பகுதியை தேடும் பணி தீவிரம்

இதையடுத்து, `ஆதார் கார்டு கொடுங்கள். அந்த எண்ணை பதிவு செய்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்றும், அப்போதுதான் ஒவ்வொரு முறையும் வரும்போது உங்களுக்கான சலுகைகள் கிடைக்கும்' என்றும் செவிலியர்கள் கூறியுள்ளனர். சிறுமியின் ஆதார் கார்டை புவனேஸ்வரி கொடுத்துள்ளார். அப்போது, சிறுமிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பது தெரியவந்தது. உடனே சிறுமியின் தந்தை யார் என கேட்டபோது முத்துக்குமாரை காட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் குழந்தைகள் நல அமைப்பினர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் கோமதி தீவிரமாக இந்த வழக்கை விசாரித்துள்ளார்.

போலீஸ் தன்னை தேடுவதை அறிந்த புவனேஸ்வரி தலைமறைவாகி விட்டார். முத்துக்குமாரைர் பொன்னேரியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள சிறுமியின் தாயாரான புவனேஸ்வரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சொந்த மகளையே மற்றொருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ய தாய் அனுமதித்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

Trending News