வலிமை பட பாணியில் போதைபொருள் நெட்ஒர்க்கை பிடித்த சென்னை போலீஸ்!

மெத்தம்படமைன் போதை பொருள் விற்கும் நெட்ஒர்க்கை சென்னை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 9, 2022, 02:25 PM IST
  • போதைப்பொருள் கும்பலை பிடித்த போலீஸ்.
  • நெட்வொர்க் வைத்து செயல்பட்டது அம்பலம்.
  • அனைவரும் சிறையில் அடைப்பு.
வலிமை பட பாணியில் போதைபொருள் நெட்ஒர்க்கை பிடித்த சென்னை போலீஸ்! title=

சென்னை பெருநகரில் "போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை"  மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இதன் தொடர்ச்சியாக, வடக்கு மண்டல இணை ஆணையாளர் ரம்யபாரதி தலைமையிலான  தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை காவல் குழுவினர் கடந்த 6ம் தேதி புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.உ.சி.நகர் இரயில் நிலையம் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக பையுடன் வந்த நபரை விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து உள்ளார்.

மேலும் படிக்க | போதைப்பொருள் விற்ற காதல் ஜோடி கைது!

இதனையடுத்து சந்தேகத்தின்பேரில் அவரது பையை சோதனை செய்த போது, அதில் கஞ்சா மற்றும் போதை பவுடர் வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், கஞ்சா மற்றும் போதை பவுடர் வைத்திருந்த புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரோஹித் என்பவனை கைது செய்த தனிப்படையினர் அவனை புது  காவல் நிலையத்தில் ஒப்படைத்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவனிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 5 கிராம் எடை கொண்ட மெத்தம்படமைன் என்ற போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ரோஹித் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக காவல்துறையினர் ரோஹித்திடம் நடத்திய விசாரணையில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இராயபுரத்தை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரை நேற்று கைது செய்து அவரிடமிருந்து 80 கிராம் எடையுள்ள மெத்தம்படமைன் போதை பவுடரை பறிமுதல் செய்தனர். 

drug

மேலும் விசாரணையில் காதர் மொய்தீன் ஆர்.கே.நகரை சேர்ந்த நாகூர் ஹனீபா என்பவரிடம் மேற்படி மெத்தம்படமைன் போதை பொருளை வாங்கி, ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர் மற்றும் வட சென்னையின் பிற பகுதிகளில் உள்ள மற்ற விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து விற்பனை செய்வது தெரியவந்தது. அதனடிப்படையில் தனிப்படை காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, நேற்று மாலை தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த நாகூர் ஹனிபா என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் மெத்தம்படமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் நாகூர் ஹனிபா, அம்பத்தூரை சேர்ந்த ஷேக் முகமது, இராயபுரம், காஜா நவாஸ், மண்ணடியைச் சேர்ந்த தமீம் (எ) ரசுல்லா ஆகியோரிடமிருந்து மெத்தம்படமைன் போதை பொருளை வாங்கி விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். 

 

மேலும் படிக்க | நடுரோட்டில் பேருந்து மீது ஏறி தியானம் செய்த இளைஞர்!

அதனடிப்படையில் காவல் குழுவினர் மண்ணடியைச் சேர்ந்த தமீம் ரசுல்லா என்பவரை பிடித்து அவரிடமிருந்த மெத்தம்படமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். மேலும், அம்பத்தூர் பகுதியில் உள்ள ஷேக்முகமது என்பவரது வீட்டில் காவல் குழுவினர் சோதனை நடத்தி அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த மெத்தம்படமைன் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாகியுள்ள ஷேக் முகமது என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமான தேடிவருகின்றனர். மேலும் தனிப்படை காவல் குழுவினருக்கு ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோலைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மேற்கூறிய நபர்களுக்கு தொடர்ந்து மெத்தம்படமைன் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை காவல் குழுவினர் ஓங்கோலுக்குச் சென்று விசாரணை செய்து ரமேஷ் வீட்டிற்குப் பின்னால் மெத்தம்படமைன் தயாரிக்கும் ஆய்வகத்தை கண்டுபிடித்து ரமேஷின் உதவியாளர் வெங்கட் ரெட்டி என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். 

drug

தலைறைவாகியுள்ள ரமேஷ் என்பவரை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட காதர் மொய்தீன் மற்றும் நாகூர் ஹனிபா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.  வெங்கட்ரெட்டி கைது செய்யப்பட்டுள்ள ஷேக் முகமது மற்றும் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வடசென்னை பகுதிகளில் மெத்தம்பட்டமைன் போதை பொருள் வாங்கி பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை காவல் குழுவினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | வீட்டில் பதுக்கியிருந்த ₹20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News