கோவை : 20 லட்சம், 50 பவுன் நகைகளை வாங்கிய 2வது கணவர் - காவல்துறையில் பெண் புகார்

கோவையை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய 2வது கணவர் ஏழரை கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 10, 2024, 07:36 AM IST
  • ஏழரை கோடி ரூபாய் கேட்டு மிரட்டும் 2வது கணவர்
  • உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் புகார்
  • கோவை மாநகர காவல்துறை விசாரணையை தொடங்கியது
கோவை : 20 லட்சம், 50 பவுன் நகைகளை வாங்கிய 2வது கணவர் - காவல்துறையில் பெண் புகார் title=

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அனுபமா (38). இவருக்கும் தேவ்குமார் மிஸ்ரா என்பவருக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2008 ஆம் ஆண்டு தேவ்குமார் மிஸ்ராவிடம் இருந்து அனுபமா விவாகரத்து பெற்றார். தேவ்குமார் மிஸ்ரா வரதட்சணையாக அனுபமாவிடம் இருந்து வாங்கி இருந்த நகைகளை விற்று கோவை வடவள்ளி பகுதியில் இடம் ஒன்றை வாங்கினார். அந்த இடத்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுபமா பெற முயற்சி செய்தார். 

அந்த நேரத்தில் கோவை ரேஸ்கோர்ஸை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தான் வக்கீல் என்றும், இது போன்ற பிரச்சனைகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து முடித்து தருவதாகவும் கூறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அனுபமாவும் வக்கீல் செந்தில்குமாரும் பழகி வந்தனர். அப்போது செந்தில் குமார் அனுபமாவை காதலிப்பதாகவும், தன்னுடைய மனைவி கார்த்திகேயனியை விவாகரத்து செய்து தனியாக வசித்து வருவதால் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு  செந்தில்குமாரும், அனுபமாவும் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் படிக்க | கரூரில் கடும் வெப்ப அலை... மதிய நேர வேலைக்கு விலக்கு அளிக்க கோரிக்கை..!!

திருமணத்திற்கு பிறகு அனுபமா பெயரில் உள்ள பல கோடி ரூபாய் சொத்துக்களை தனக்கு தர வேண்டும் என செந்தில் குமார் கேட்டுள்ளார். அனுபமா தர மறுக்கவே அவரை வீட்டை விட்டு வெளியேற்றினார். பின்னர் சில நாட்கள் கழித்து அனுபமாவை சமாதானப்படுத்தி கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசித்து வந்தனர். இதற்கிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு செந்தில்குமாரின் அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் அவருக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இது பற்றி அறிந்து அனுபமா தனது கணவர் செந்தில்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்ய இருப்பதாக கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுபமா தனது கணவர் செந்தில் குமார் குறித்து விசாரிக்க தொடங்கினார்.அப்போது 2022 ஆம் ஆண்டு தான் செந்தில்குமார் மதுரை நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற விபரம் தெரியவந்தது. ஏற்கனவே விவாகரத்து ஆனதாக கூறி தன்னை திருமணம் செய்து மோசடி செய்ததாக அனுபமா வக்கீல் செந்தில்குமாரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் சில நாட்கள் கழித்து வக்கீல் செந்தில்குமார் ஏழரை கோடி பணம் தந்தால் மட்டுமே சேர்ந்து வாழ்வேன் என கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து தனது மனைவி அனுபமாவை அங்கு இருந்து துரத்திவிட்டு உள்ளார். பின்னர் அனுபமா கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தார். கடந்த நவம்பர் மாதம் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் அனுபமா கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்து உள்ளார். மேலும் வக்கீல் செந்தில் தன்னிடம் இருந்து 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து விட்டதாகவும் புகாரில் அனுபமா கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் படிக்க | வாக்கு எண்ணிக்கை மையத்தில் செயல்படாத சிசிடிவி..பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News